உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, மார்ச் 21, 2009

மலரும் நினைவுகள் - (தூர்தர்ஷன் பார்த்தவர்களுக்கு மட்டும்)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் ந்ஞ்சு என்பதற்கு சரியான உதாரணம் TV.


80-களிலும், 90-களிலும் தூர்தர்ஷனை கொண்டு நாம் அடைந்த மகிழ்ச்சியில் கொஞ்சமாவது இப்போது இருக்கிறதா? எந்த சானலை பார்ப்பது என்ற சண்டையிலும், குழப்பத்திலுமே ஓய்வு நேரம் ஓடி விடுகிறது.


பழைய நினைவுகளை கிளறுவதில் இசைக்கும், வாசனைக்கும் பெரும் பங்கு உண்டாம்..
வாசனையை ஆன்லைனில் கொடுக்கும் டெக்னாலஜி இருக்கிறதா தெரியவில்லை.. ஆனால் இசை?

இதோ உங்கள் நினைவுகளை கிளறும் ஒரு இசை வீடியோ...





வெள்ளி, மார்ச் 20, 2009

கூட்டணி வைக்கலையோ கூட்டணி


தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களும், யூகங்களும் களைக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி என்ற பெயரில், ஐந்து வருடமாய் அடித்துக் கொண்டும், மூன்றாந்தர பேச்சாளர்களை போல அசிங்கமாக பேசிக்கொண்டும் இருந்த கட்சித் தலைவர்கள், வெட்கமில்லாமல் கைக் குலுக்க போகிறார்கள்...

பச்சோந்தித் தனங்கள் பகிரங்கமாய் பட்டியலிடப்படும் நேரம்.

என்னவெல்லாம் நடக்கலாம்..?


==========================================

ஏம்ப்பா இந்த கூட்டணி கூட்டணிங்கறாங்களே அப்படின்னா என்னப்பா?

ஆ... தேர்தலுக்கு மட்டும் ஒண்ணா இருந்துட்டு அப்புறமா அடிச்சிக்கறதுக்கு பேரு தான் கூட்டணி...

==================================

என்னய்யா இது அநியாயமா இருக்கு... சிரஞ்சீவி கட்சி ஆந்திராவில இருக்கு.. அது கூட போய் கூட்டணினு சொல்றாரு தலைவரு?..

யோவ்.. எப்படியும் முக்கால் வாசி கட்சிங்களுக்கு மனசுல தானே இடம் கொடுக்க போறாரு... அப்புறம் கூட்டணி கட்சி ஆந்திராவுல இருந்தா என்ன.. அஸ்ஸாமுல இருந்தா என்ன?

===================================

யாருய்யா அது பிச்சைக்காரன்... வாசல்ல நின்னு கத்திக்கிட்டே இருக்கிறான்... கூட்டணி விவாதம் நடக்குதுல்ல? போயிட்டு நாளைக்கு வரச்சொல்லு...

தலைவரே.. மெதுவா பேசுங்க... அவரு புதுசா வந்திருக்கிற ஜாதிக் கட்சி தலைவரு... அவருக்கு சீட் தரலைன்னா.. எல்லா தொகுதிலயும் தனிச்சு போட்டியிடுவேன்னு மிரட்ட வந்திருக்காரு...

====================================

தலைவர் ஏன் சோகமா இருக்காரு?

மொத ரெண்டு அணியில இடம் இல்லைன்னு கோச்சுக்கிட்டு மூணாவது அணிக்கு போனாரு.. அங்கேயும் இடம் இல்லைன்னு, நாலாவது, அஞ்சாவதுன்னு போய்.. கடைசியா ஏழாவது அணியில பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதா போச்சேன்னு சோகமா இருக்காரு...

====================================


தேர்தல் ஆணையர் ஏன் டென்ஷனாய் கத்தறார்?

கூட்டணி கட்சிங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு.. ஒரு தொகுதிக்கு ரெண்டு எம்.பி தேர்ந்தெடுக்க சட்டத்துல வழியிருக்கான்னு தலைவர் போன்ல கேட்டுட்டாராம்...

=========================================

போன தடவை அந்த கட்சியோட கூட்டணி வெச்சீங்க... இந்த தடவை இந்த கட்சியோட கூட்டணின்னு சொல்றீங்க.. உங்க கொள்கை தான் என்ன...

யாரு எங்களை சேர்த்துகறாங்களோ அவங்க கூட தான் சேருவோம்... அதான் எங்க கொள்கை

==========================================

ஏன் தலைவரே... யாரு கூடயும் கூட்டணியே வெக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க...

நான் எப்படா அப்படி சொன்னேன்... எவனோ பத்திரிகையில வதந்திய கிளப்பிட்டான்.. யாருமே என்னை சேர்த்துக்க மாட்டேங்கறாங்கடா... (அழுகை)

=====================================================

என்னது? மூணாவது அணியில சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்து தான் பிரதமரை தேர்ந்தெடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்காங்களா? அதுக்கு உங்க கட்சி தலைவியிம் சரின்னு சொல்லிடாங்களா? எப்படிய்யா?

ஆமா.. அப்படியே எல்லா சீட்டுலயும் அவங்க பேரையே எழுத சொல்லிட்டாங்க...


======================================================

இலங்கை பிரச்சினையில வேணும்னா நாங்க சைலண்டா இருந்திருக்கலாம்.. ஆனா பூடான் பிரச்சினைல அப்படி இருக்க மாட்டோம்...

பூடான்ல என்னங்க பிரச்சினை?

ஆள் அனுப்பியிருக்கோம்ல.. இனிமே தான் பிரச்சினை வரும்..

========================================================

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவ பேசினா போலீஸ் அரெஸ்ட் பண்ணுதுன்னு.. ரஷிய தமிழர்களுக்கு ஆதரவு குரல் தர்றதா தலைவர் முடிவு பண்ணிட்டார்...

ரஷியாவில தமிழர்கள் எங்கய்யா இருக்காங்க?

இது என்ன பிரமாதம்.. அய்யோ ரஷியாவில தமிழர்கள் இல்லையா.. தமிழர்களை விரட்டிய ரஷ்ய ஏகாபத்தியத்தை எதிர்த்து உண்ணாவிரதம், போராட்டம்னு கலக்கிட மாட்டாரு தலைவரு?