உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

மழைச்சுவை

சென்னையை உண்டு இல்லை என்று செய்துக் கொண்டிருக்கும் மழையை தான் ரசிக்க முடியவில்லை... ஜோக்கையாவது ரசிப்போம்





அவர் சரியான சினிமா பைத்தியம்னு எப்படி சொல்ற


'ஜோ' ன்னு மழை பெய்யுதுன்னு சொன்னா சரியான அவுட் டேட்டட் மழையா இருக்கே, 'தமன்னா'ன்னு இல்லைன்னா 'அனுஷ்கா'ன்னு தானே பெய்யனும்னு சொல்லிட்டு போறார்

 ------------------------------------------------------------------------------------------------------


எதுக்குய்யா அந்த வியாபாரி மழையும் அதுவுமா திடீர்னு அத்தனை பாய் வாங்கிட்டு போறார்


மழைல வியாபாரம் படுத்துடுமாம்.. அதான்


-------------------------------------------------------------------------------------------------------


மழையில சென்னை நகரமே மிதக்குதுன்னு வந்த செய்தியை தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டார்னு நினைக்கிறேன்


ஏன்


வீட்டுக்கு ரெண்டு துடுப்பு கொடுக்க சொல்லி உத்திரவு போட்டிருக்காரே...


------------------------------------------------------------------------------------------------------
ஆளுங்கட்சிக்கு எதிரா பேசுரறேன் பேர்வழின்னு தலைவர் நேத்தைக்கு தண்ணி போட்டு ஓவரா உளறிட்டார்


என்னாச்சு


மழை நீர் வடிய ஆளுங்கட்சியினர் கால்வாய் கட்டியிருப்பதாக கூறுகிறார்கள்.. 'கால்'வாய் போக மீதி முக்கால் வாய் எங்கே… ஊழல் செய்தது யார்னு கேட்டு மானத்தை வாங்கிட்டார்….


------------------------------------------------------------------------------------------------------
உங்க பையன் பெரிய அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க


மழை பெய்தா லீவ் விடறாங்க.. அப்போ லீவ் விட்டா மழை பெய்யனும்ல..
அப்டின்னு கேட்டு டீச்சரையே குழப்பிட்டான்…


------------------------------------------------------------------------------------------------------


தலைவர் சந்தானம் நடிச்ச படத்தை பார்த்துட்டு அப்படியே மீட்டிங் வந்துட்டார்னு எப்படி சொல்றே


கடவுள் கொடுத்த கொடை மழைன்னு சொல்றாங்க.. அது 'குடை' மழையா இருந்தா நாம எப்படி நனைவோம்... இது கூட தெரியாமல் அரசியல் நடத்துகிறார்கள் எதிர்க்கட்சியினர் அப்பிடின்னு பேசிட்டார்..