உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஏப்ரல் 23, 2009

பந்த் பண்ணலையோ பந்த்

பொது ஜனம் ஒருவரும், ஆளும் கட்சி ஆள் ஒருவரும் பேசிக் கொள்கிறார்கள்....

“ஏங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் வேலை செய்யும்னு பேப்பர்ல போட்டிருக்கான்? நீங்க லீவ்னு சொல்றீங்க...”

“பஸ், ஆட்டோ எதுவும் ஓடலை.. எப்படி வாத்திமாருங்க பள்ளிக்கூடம், காலேசு வருவாக? அதான் லீவ்..”

“என்னது பஸ் ஓடலையா? போலீஸ் பாதுகாப்போட ஓடும்னு ஓடும்னு அரசு அறிவிச்சுகிறதா பேப்பர்ல போட்டிருக்கானே?”

“பஸ்ஸை ஓட்ட மாட்டோம்னு தொழிற்சங்கம்லாம் வேலை நிறுத்தம் பண்ணுது?.. அப்புறம் எப்படி ஓடும்...”

“என்னங்க இது அநியாயமா இருக்கு? அரசு அலுவலகம்லாம் வேலை செய்யுதா இல்லையா?”

“வேலை செய்யுது.. ஆனா ஆளுங்க யாரும் இருக்க மாட்டாங்க.. அப்படியே இருந்தாலும், மக்கள் அங்க போறதுக்கு பஸ், ஆட்டோ கிடையாதுல்ல... இப்ப என்ன செய்வீங்க...”

“எப்படிங்க ஒரு முதல்வர் பந்த் அறிவிக்கலாம்? அவர் அறிவிச்சதுக்கு அப்புறம் அரசு தெரிவித்ததுன்னு அது ஓடும், இது ஓடும், அலுவலகம் தொறந்திருக்கும், காலேஜு தொறந்திருக்கும்னு எப்படி சொல்றாங்க? “

"கட்சித் தலைவரா இருந்து பந்த் அறிச்சிருக்கார்.. அரசோட தலைமைப் பொறுப்பில முதல்வரா பந்த் நடக்கிறப்ப
மக்கள் பாதிக்கப்படாம இருக்க போலீஸ் பாதுகாப்போட பஸ்ஸை இயக்கறார்... அரசு அலுவலகம் வேலை செய்ய ஆவண செய்யறார்"

"என்னய்யா குழப்பறீங்க? அதான் பஸ் ஓடலையே?"

"அதுக்கு முதல்வர் பொறுப்பில்லைங்க... போக்குவரத்து தொழிலாளிங்க பஸ் ஓட்டலைன்னா அவரு என்னங்க செய்வாரு...?"

"அப்ப எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு?"

"யாரும் கலாட்டா பண்ண கூடாதுல்ல அதுக்கு தான்"

"என்னய்யா ஒரு கடை கண்ணி இல்ல.. ஓட்டல் இல்ல... எப்படிய்யா கூலித் தொழிலாளிங்க எல்லாம் பொழைப்பாங்க"

"இதுக்கே இப்படி சொல்றீங்களே? அங்க இலங்கையில தமிழர்கள் எப்படி பாதிக்க படறாங்க தெரியுமா?"

"யோவ்... நீங்க தானேய்யா மத்திய அரசுல இருக்கீங்க.. மந்திரி சபையில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே..."

"யோவ் அங்கே பிரதமரே முடிவெடுக்க முடியலை அந்தம்மா தன் முடிவெடுக்கிறாங்க... நாங்க என்னத்தை முடிவெடுக்கிறது..."

"அப்ப மந்திரி சபையை விட்டு வெளியே வர வேண்டியது தானே..."

"வெளிய வர்றதுக்குள்ள தான் தேர்தல் வந்திருச்சே? எங்க தப்பு இல்லைங்க"

"அவங்க தான் உங்க பேச்சை கேக்க மாட்டேங்கிறாங்களே? மறுபடி எதுக்கு அவங்களோட கூட்டணி?"

"இந்த முறை கேக்கிறதா சொல்லியிருக்காங்க..."

"கேக்கலைன்னா... மந்திரி சபையை விட்டு வெளியே வந்திடுவீங்களா"

"மந்திரி சபையை விட்டுட்டு வர்றதா? வந்தா இலங்கை பிரச்சினை தீர்ந்திடுமா? யார்றா இவன் விவரம் கெட்டவனா இருக்கான்?"

"பின்ன?"

"மறுபடி தந்தி, மனித சங்கிலி, பேரணி, பந்த் எல்லாம் உண்டு... ஆல் தமிழகம் என்ஜாய்"

திருவாளர் பொது ஜனம் மயங்கி சரிகிறார்...




நம் நாட்டில் என்ன பணி முதன்மையாக செய்யப் பட வேண்டும்?

சாலைகள் இடுதலா?

வேலை வாய்ப்பு பெருக்குதலா?

நதிகள் தேசிய மயமாக்கமா?

எல்லாவற்றிலும் முதன்மையாக செய்யப்பட வேண்டிய பணி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படுவதாக தான் இருக்க வேண்டும்...

ரேஷனுக்கு ஒரு அட்டை, வாக்களிக்க ஒரு அட்டை, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு அட்டை, வருமான வரித்துறைக்கு ஒரு அட்டை என பல அட்டைகளை சுமந்து பெருங்குழப்பத்துக்கு நடுவே நாம் வாழ்ந்து வருகின்றோம்...

ரேஷனில் ஆரம்பித்து, ஓட்டு போட, வங்கி கடன் வாங்க, கார் வாங்க, வெளிநாட்டுக்கு போக இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே அடையாள அட்டை இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்...

ஒருங்கிணைந்த அடையாள அட்டையில் என்ன விவரங்கள் இருக்க வேண்டும்?

ஒருங்கிணைந்த அடையாள எண், பெயர், பிறந்த தேதி, முகவரி, மருத்துவ விவரங்கள்.

இந்த அடையாள எண்ணில் அரசு தகவல் தளத்தில் அட்டைதாரரின் சொத்து விவரங்கள், உறவினர் விவரங்கள், வருமான வரி குறித்தான விவரங்கள் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும்...

பெயர், புகைப்படம் மட்டும் அல்ல கருவிழி ரேகை, கைரேகை இரண்டும் அதில் பதிக்கப் பட வேண்டும்.

ஒரு தனி மனிதை பற்றிய அனைத்து விபரங்களும் சேமிக்கப் பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மான இது இணையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் எல்லவிடத்திலும் தொடர்பு கொள்ள முடிந்து தகவல்கள் எடுக்க முடியும்.

இது எப்படி நாட்டு முன்னேற்றத்துக்கு உதவும்?

  • உங்கள் ஓட்டை யாரும் மாற்றிப் போட முடியாது... யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின்
    வாக்குகளை பதியலாம்.

  • கள்ள ஓட்டு தவிர்க்கப் பட்டாலே தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்க படுவதை தவிர்த்திடலாம்... தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது தவிர்க்க பட்டாலே பாதி பிரச்சினை குறைந்து விடும்.


  • ஆள் மாறாட்டம், போலி பெயரில் கடன் எல்லாம் ஒழிக்கப்பட்டு ஜாமீன் யாரும் கொடுக்காமலேயே வங்கியில் பணம் எடுக்க முடியும்.


  • அரசாங்கம் சம்மந்தமான வேலைகளில் தான் இன்னார் தான் என்று நிருபிக்க பட வேண்டிய தேவைகள் குறைந்து போகும். வேலைகள் விரைவாக நடக்கும்.


  • வழக்குகள் நடை பெறும் வேகம் அதிகரிக்கும். சாட்சி, பிரதி வாதிகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும்.


  • மேற்குறிப்பிட்ட விஷயங்களோடு டி.என்.ஏ சாம்பிளையும் சேமித்து குறித்து வைத்தால் வாரிசு பிரச்சினைகள் விரைவாக தீரும்.


  • ஒன்றுக்கும் மேற்பட்ட பேன் கார்டுகள், லைசென்சுகள், அடையாள அட்டைகள் எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது... ஒருங்கிணைந்த அடையாள அட்டை தான் பான் கார்டு, லைசென்சு எல்லாமுமாக இருக்கும்.அதை வைத்து தான் பஸ் டிக்கெட்டு முதற்கொண்டு, விமான டிக்கெட்டு வரை வாங்க வேண்டியிருக்கும்...


  • தனி மனித தவறுகள் ஒருங்கிணந்த அடையாள் அட்டையில் பதியப் படும். தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை எளிதாக பெற்று வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ள முடியும்.


  • சந்தேகத்திடமான நபர் என்று யாருமே இருக்கவும் முடியாது... கைது செய்யப்படவும் முடியாது...(அடையாள அட்டை இல்லாமல் சுற்றும் ஒருவர் போலீசில் சிக்கினாலோ, இல்லை யாருடைய அடையாள அட்டை தொலைந்து போனாலோ கருவிழி அல்லது கை ரேகையை வைத்து அவர் விவரங்களை பெற்று அவரை அடையாளம் காண முடியும்.)


  • ஒருவரை பற்றிய மருத்துவ அறிக்கையும் அந்த அடையாள அட்டையில் சேர்க்கப் பட்டால் விபத்து நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அது பயனுள்ளதாய் இருக்கும்.


  • நாட்டின் மக்கள் தொகை விவரம் துல்லியமாக தெரிந்து கொண்டேயிருக்கும். அரசாங்கம் திட்டங்களை இன்னும் தெளிவாக தீட்ட முடியும். மாநிலம், நகரம், பேரூர், சிற்றூர், கிராமம், தெரு வரை தெளிவான மக்கள் தொகை இருப்பை தெரிந்து கொள்ள முடியும். (இப்போதைய சென்ஸஸ் முறை ஒரு மனிதர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அவரை ஒரே இடத்தில் மட்டும் தான் கணக்கெடுத்தோமா என்பதை உறுதி செய்வதில்லை...)


  • ஒரு தனி மனிதனுக்கு எவ்வளவு சொத்து எங்கெங்கு இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.யாரும் தலை மறைவு வாழ்க்கையெல்லாம் நடத்த முடியாது. தகவல் தெரிவிக்காமல் சுவிட்சர்லாந்து எல்லாம் போய் வர முடியாது...


இன்னும் எவ்வளவோ...

நடைமுறை சிக்கல்கள்...


  • அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் எதிர்ப்பார்கள்.

  • தகவல் தளத்தை உடைத்து தகவல் திருட முயற்சிப்பார்கள்.

  • தகவல் உள்ளீடு செய்வதில் தவறுகள் நடக்கலாம்.

  • தகவல் தளத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருக்கும்.

  • இத்தகவல்களை முழுதாக திரட்டி ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்குவதற்கு வருடக்கணக்கில் ஆகலாம். பெருமுயற்சியும் திட்டமிடலும் தேவை.

  • அடையாள அட்டை என்றால் ப்ளாஸ்டிக், பேப்பர் அட்டை அல்ல... ஆக்சஸ் கார்டு போன்ற விஷயம்...



ஐந்தாண்டுக்கு(?) ஒருமுறை 100 கோடி மக்களுக்கு தேர்தல் நடத்திக் காட்டும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தும் அரசாங்கத்துக்கு இது பெரிய பணி அல்ல.

14 லட்சம் பணியாளர்கள் உள்ள இந்தியன் ரயில்வேயில் ஆண்டுக்கு 1000 கோடி பயண விவரங்களையும், 73 கோடி டன் சரக்கு பரிமாற்ற விவரங்களையும் அநாயசமாக கையாளும் இந்திய அரசாங்கத்துக்கு இது சாத்தியமே.

"பாய்ஸ்" படத்தில் செந்தில் சொல்லுவார் "Information is Wealth"(தகவல் தான் சொத்து).

Information Wealth மட்டுமல்ல... அது இந்தியா போன்ற வளரும் வல்லரசு நாடுகளுக்கு அது தான் பவர்(Power).

இது குறித்தான திட்டம் ஏதவது இந்திய அரசாங்கம் வசம் உள்ளதா என்று தெரியவில்லை... திட்டம் இது வரையில் இல்லையென்றால் இது போன்ற திட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை அரசாங்கம் உணரும் நாள் விரைவில் வர வேண்டும்.

திங்கள், ஏப்ரல் 20, 2009

வேட்(டு)பாளர்கள்

இந்த மிகைப்படுத்துதல் எல்லாம் வேட்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படும் போதே எழுதியது... வலையேற்ற தாமதமாகி விட்டது...


முதல் தடவையா எம்.பி சீட் கிடைச்ச நம்ம தலைவர் அந்த கட்சி தலைவி வேட்பாளர்களை மாத்தறாங்கன்னு ஏன் பயப்படறார்னு தெரியலை?

பின்னே பயபடாம எப்படி இருக்க? அவரையும் மாத்திட்டா என்ன பண்றதுன்னு பயம் இருக்கும்ல?

நீங்க வேற இவரு எதிர்க் கட்சில இல்ல இருக்கார்...

======================================

தேர்தல் அதிகாரி போனில்...

“இதோ பாருங்கம்மா.. உங்க கட்சி வேட்பாளரை மட்டும் தான் நீங்க மாத்த முடியும்... எதிர்க் கட்சி வேட்பாளர்களை மாத்த சட்டத்தில இடம் இல்லை...”

=================================

மாவட்ட துணை தலைவர் தலைவரிடம்

“பயப்படாதீங்க தலைவரே... தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டீங்கல்ல? இனிமே உங்களை வேட்பாளர் லிஸ்ட்ல இருந்து நீக்க முடியாது...”

=================================

ஆனாலும் நம்ம கட்சியில குழப்பம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு..

ஏன் அப்படி சொல்றே?

24 தொகுதியில 57 முறை வேட்பாளரை மாத்திட்டாங்க... இதுல என்ன கொடுமைன்னா, ஒரு தொகுதியில ஒரே ஆளை 3 முறை வேட்பாளரா அறிவிச்சு வாபஸ் வாங்கியிருக்காங்களாம்..

========================================

ஏன் தலைவர் சோகமா இருக்காரு...

வேட்பாளர் பட்டியில்ல இருந்து அவரு பேரை நீக்கிட்டதா மேலிடத்துல இருந்து செய்தி வந்திருக்கு..

சரி அடுத்த தடவை பாத்துக்கலாம்...

யோவ் அவரை வேட்பாளரா அறிவிக்கவே இல்ல.. பின்ன எப்படி நீக்கினாங்கன்னு கட்சி வட்டாரம் புல்லா கன்ஃப்யூஸன்ல இருக்கு....

மக்கு மேலாளரின் வரைப்படம்

நம் மக்கு மேலாளரின் மடிக்கணினி குறித்தான அட்டகாசத்தை பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம்...

இப்போது புத்தம் புது அட்டகாசம்...

ஒரு நாள் நண்பர் ஒருவர் மக்கு மேலாளர் அழைப்பதாக தகவல் வரவே மனத்தினுள் எல்லா கடவுள்களையும் வணங்கிவிட்டு

"இப்போ தானே டா அந்த கிராஃப் வேணும், இந்த கிராஃப் வேணும்னு ஒன்றரை மணி நேரம் மொக்கை போட்டுட்டு போனாரு... எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டேன்.. இன்னும் என்னவாம்..."

என்று முனகிய படியே கிளம்பி போனார்...

அனைவரும் பரப்பரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்... அவர் எப்போது திரும்பி வந்தார் என்பதை கவனிக்க வில்லை... பார்த்தால் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்...

"யோவ்.. எப்பய்யா வந்தே? போன காரியம் என்னாச்சு?" என்று மற்றொரு நண்பர் வாயைக் கிளற,

"ஒரு நாலஞ்சு கிராஃப் போட்டுக் கொடுத்தேன்ல?"

"ஆமா?.. எது எந்த டேட்டவோடதுன்னு தெரியலையாமா?"

"அப்படி சொல்லியிருந்தா தான் பரவாயில்லையே... கிராஃபை மாத்தி எடுத்து பாத்துக்கிட்டிருந்தாரு... சார் கிராஃப் மாறிடுச்சுன்னு சொன்னா... இது அதே கிராஃப் தாம்பா... நடந்து கொண்டு வந்தப்ப கோடெல்லாம் கொஞ்சம் அசங்கிடுச்சுன்னு சொல்றாருப்பா..."

அடுத்த விநாடி அங்கே கிளம்பிய வெடிச்சிரிப்புக்கு அனைவரும் வேலையை விட்டு திரும்பி பார்த்தனர்.