உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஜனவரி 30, 2009

குரல் கொடுங்கள், உயிரைக் கொடுக்காதீர்கள்

முத்துகுமார் செய்த உணர்ச்சிவயப்பட்ட செயலை யாரும் இனி செய்ய வேண்டாம்.

அப்படி செய்தால் தமிழர் ஆதரவு குரலில் ஒன்று குறைந்து போகுமே தவிர, பெரிய பயன் ஏதும் இராது... அஞ்சலி செலுத்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் இன்று அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியும் அவர்களின் ஒரு அன்றாட அலுவலாக தான் இருக்க போகிறது..

பத்திரிகை நண்பர்கள் எரிக்க வேண்டியது பொய்களையும், புனைச் செய்திகளையும்.


அவர்களின் தலையாய பணி, எந்த பிரச்சினைக்கும் பத்திரிகைகள் தரக்கூடிய, தர வேண்டிய ஆதரவு - மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் பணியாமல் அப்படியே உண்மையாக வெளியிடுவது தான். தன்னை தானே எரித்துக் கொள்வது அல்ல.

இலங்கையில் என்ன பிரச்சினை என்றே தெரியாமல் அறிக்கை மேல் அறிக்கை விடும் திடீர் அரசியல்வாதிகளும், என்ன பிரச்சினை அதற்கு என்ன தீர்வு என்று நன்றாக தெரிந்தும் அரசியல், சுய லாபம் கருதி வாளாவிருக்கும் சுயநல அரசியல் தலைவர்களும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போகும் போது, நம்மை போன்ற பொது மக்கள் செய்வதற்கு அதிகம் ஏதுமிருக்காது... கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும், முடிந்த நிவாரண நிதி அளிப்பதையும் தவிர்த்து.

அவர் குடும்பத்துக்கும், தமிழ் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், தீக்குளிப்பு போராட்டங்களுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.

அவரின் உணர்ச்சி வயப்பட்ட செயலுக்கு வருந்தும் அதே நேரத்தில் அவரின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கியே தீர வேண்டும்.



ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

(ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே இறந்தாலும் உயிர் வாழ்பவன் எனக் கருதப்படுவான். அதற்கு மாறானவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்கு சமம்.)

-திருவள்ளுவர் -(அதி: ஒப்புரவறிதல்- Duty To Society)

செவ்வாய், ஜனவரி 27, 2009

ஆளுமைகள்

என் வீட்டருகே ஒரு நண்பர் வசிக்கிறார்.. அவருக்கு ஒரு விநோதமான பழக்கம் இருக்கிறது...

என்ன பழக்கம் என்கிறீர்களா? சினிமா பார்க்கும் பழக்கம்... இது விநோதமான பழக்கமா என்கிறீர்களா?

அதில் ஒரு விஷேசம் இருக்கிறது...


நண்பர் ஆர்வமாக புது, பழைய எல்லா மொழி திரைப்படங்களும் பார்க்க கிளம்பி விடுவார்...

திரையரங்கு எவ்வளவு தூரமானாலும் சரி... என்ன வசதி இருந்தாலும் சரி... இல்லையென்றாலும் சரி… ஆர்வமாக சென்று படம் பார்ப்பார்...

ஆனால் முதல் பத்து- இருபது நிமிடம் தான் படம் பார்ப்பார்... அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வந்து விடுவார்... எவ்வளவு சுவாரஸியமான படம் என்றாலும் பத்து- இருபது நிமிடம் தான்...

இண்டர்வெலுக்கு 15 நிமிடம் முன்பு பிட் போடப்படும் படமானாலும் சரி... அண்ணன் 10-20 நிமிடங்கள் தான் படம் பார்ப்பார்…

கூட வரும் நண்பர்கள் வந்தாலும் சரி, வரவில்லையென்றாலும் சரி... இவர் மட்டுமாவது கிளம்பி விடுவார்...

ஏதோ ஒரு தமிழ் படத்தை அதிக பட்சமாக இண்டர்வெல் வரை பார்த்த ஒர் உடைக்கப்படாத ரெக்கார்டு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்களை சினிமாவுக்கு அழைத்தாலும் "இண்டர்வெல் வரைக்கும் படம் பார்க்கலாம் வர்றியா” என்று அழைப்பது தான் தலைவருக்கு வழக்கம்...

இப்போது திருமணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது... ஆளை பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது... திருந்தி விட்டாரா என்று தெரியவில்லை...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நானும் என் நண்பனும் தணிக்கை நிறுவனத்தில் பயிற்சிக்காக வேலை பார்த்து கொண்டிருந்த போது, ஒரு மத்திய அரசு நிறுவனத்தில்-ல் வணிக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த நேரம்..

நானும், நண்பனும் காலையில் 10 மணிக்கு உள்ளே போனால் மாலை 4 மணி வரை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுவோம்.. ஹைதர் அலி காலத்து கணினியும், டாட் மாட்ரிக்ஸ் பிரிண்ட் அவுட்களையும் நம்பி காலந்தள்ளும் பல மத்திய அரசு நிறுவனங்களுள் அதுவும் ஒன்று...

மொத்தம் 15 அலுவலர்கள் தான் இருப்பர்கள்... ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டு.. ஒரு அரசு அலுவலகம் என்றால்... ஒருவர் அல்லது இருவர் தான் அலுவலகத்தின் 80 விழுக்காடு பணிகளை செய்வர்... மீதம் உள்ள அனைவரும் சும்மா "டம்மி பீஸ்" தான்...

இங்கேயும் அப்படி தான்... ஒரே ஒரு அனுபவம் மிக்க எழுத்தர் எல்லா பணிகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்வார்... மீதம் உள்ள முக்கால்வாசி பேர் குழுக்களாக பிரிந்து அரசியல் விவாதங்கள், சினிமா செய்திகள், தேநீர் கடைகளின் வியாபரத்தை பெருக்குதல் போன்ற அதிமுக்கிய தேசிய பணிகளில் ஈடுபாட்டுடன் செய்வார்கள்…

போன மூன்றாவது நாளில் தான் நம் பதிவின் நோக்கமான அந்த முக்கியமான அலுவலரை பார்த்தோம்... அவர் ஆள் நான்கரை அடி உயரம் இருப்பார்... ஒல்லியான தேகம்... குழுக்களில் எப்போதாவது தான் பங்கெடுப்பார்.. தான் உண்டு தன் வேலை உண்டு(இல்லை) என்று அமைதியாக அமர்ந்திருப்பார்...

எப்போதும் அந்த எப்போது இடிந்தும் விழுமோ என்றிருக்கும் கட்டிடத்தின் மோட்டு வலையை பார்த்தபடி ஏதாவது பலத்த சிந்தனையில் இருப்பார்...

நானும் நண்பரும் சேர்ந்து எங்கள் பங்குக்கு ஏதாவது பேசிக்கொண்டு செம அரட்டையில் இருப்போம்.(ஆனால் வேலையும் பார்ப்போம்... நாங்கள் வேலை செய்த்து தனியார் தணிக்கை நிறுவனம். மத்திய அரசு நிறுவனம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க).

ஒரு நாள் அலுவலகத்தில் யாரும் இல்லை... எல்லோரும் பக்கத்து தேநீர் கடைக்காரரின் வியாபாரத்தை தூக்கி நிறுத்த போயிருந்தார்கள். நான், நண்பர் மற்றும் நம் முக்கியமான அலுவலர், அலுவலகத்தை தாங்கி பிடிக்கும் மூத்த அலுவலர் நான்கு பேர் தான் இருந்தோம்... வழக்கம் போல மோட்டு வலையை பார்த்து கொண்டே அமர்ந்திருந்த நம் அலுவலர் சட்டென்று தலையை வலது பக்கம் திருப்பி மேல் நொக்கி பார்த்தார்...

அவர் பார்த்த திசையில் அவர் வலது கையை உயர்த்தினார்...சுட்டு விரல் நடு விரல் மட்டும் நீட்டி... புறங்கையை வாயருகே வைத்து ப்ளையிங்க கிஸ்ஸாக பறக்க விட ஆரம்பித்தார்....

ஒரு முறை இரு முறை அல்ல... ஒரு ஏழெட்டு முறை... திடீரென அவர் பார்த்த எனக்கும், நண்பருக்கும் தூக்கி வாரி போட்டு விட்டது...

கலவரமாக திரும்பி மூத்த அலுவலரை பார்த்தோம்.. அவர் எதையும் கண்டும் காணாமல் வேலையிம் மூழ்கியிருந்தார்...

அவருக்கு வலிப்பு ஏதாவது வந்து விட்டதா, இல்லை அமாவாசை, பௌர்ணமிக்கு இப்படி தான் நடந்து கொள்வாரா என்று புரியாமல்... திகைத்து போய் அமர்ந்திருந்த வேளையில் வெளியில் போன ஆட்கள் வந்து விடவும், எங்களுக்கு கொஞ்சம் திகில் அடங்கியது...

எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.. மாலையில் எங்கள் ஆடிட்டர் வந்தவுடன் அவரிடம் சொன்னோம்... பெரிதாக சிரித்தார்...

"பார்த்துட்டீங்களா? நானே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்... உங்களுக்காவது பரவாயில்லைப்பா.. நான் முதல்ல இதை பார்த்த அன்னைக்கு நானும் அவரும் தனியா பேசிட்டிருந்தோம்... வியர்த்து விறுவிறுத்து போயிட்டேன்... அப்புறம் எல்லார்ட்டயும் விசாரிச்சேன்... அவரு யாரையும் இதுவரைக்கும் அடிச்சு கிடிச்சு எதுவும் பண்ணதில்லையாம்..." என்று ஜோக்கடித்து விட்டு,

"அவருக்கு அப்படி பண்றது சென்டிமெண்ட்டாம்பா.. நினைச்சது நடக்கணும்னா.. நினைச்சவுடனே இப்படி பண்ணா நினைச்சது நடக்குமாம்..."

என்று முடித்தார்...

அந்த சென்ட்டிமெண்டில் இடி விழ...

அங்கே தணிக்கையில் இருந்த ஆறு மாதமும் எங்களுக்கு அல்லு இல்லை...

புதன், ஜனவரி 21, 2009

திருமங்கலம் தேர்தலும் வடிவேலு காமெடியும்

திருமங்கலம் தேர்தல் முடிவு வெளியான கையோடு அனைத்து கட்சி தலைவர்களும் கூடி நின்று கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முறைகேடுகளுக்கு யாருக்கு என்ன ஓலை தேர்தல் கமிஷனிலிருந்து வருமோ என்று.

அப்போது அந்த நடிகர் அங்கே கோபமாக வருகிறார்...

"யார்றா என் பொண்டாட்டியை டெபாஸிட் போன கட்சித்தலைவின்னு கிண்டல் பண்ணது?"

அனைவரும் கோரஸாக "ஏன் நாங்க தான் பண்ணோம்.. இப்ப என்ன பண்ண போறே?"

"ஏய் ஏய் ஏய்… மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், நார்த் ஆர்க்காட், சவுத் ஆர்க்காட்... எஃப் எம் எஸ் வரைக்கும் பாத்தவன் நான்.. பத்திரிகை TV எல்லாம் எனக்கு டெபாஸிட் போன மேட்டரை டச்சு பண்ணி டச்சு பண்ணி டயர்டாய் கிடக்கு..."

டென்ஷனான ஒரு கட்சித் தலைவர் போதையில் நாக்கை துறுத்தி கொண்டு எகிற,

"நிறுத்து... மொத்தமா மோதலாம்னு முடிவு பண்ணிட்டயா?"

"ஆமாண்டி"

"சரி இப்ப ஆரம்பி….ஒண்ணு.. ரெண்டு"

"ஏய் இன்னாடா திரும்ப தேர்தல்ல நின்னு ஜெயிக்க் போற மாதிரியே எண்ணறே?"

"பின்ன ஒரு தடவை, ரெண்டு தடவை கூட்டிட்டு போய் தோக்கடிச்சா பரவாயில்லை... அங்கங்க கூட்டிட்டி போய் தேர்தல்ல நிறுத்தி லட்சக்கணக்குல வித்தியாசம் காட்டி டெபாஸிட்டை காலி பண்ணா?... என் கட்சி, இமேஜ் எவ்வளவு தாங்கும்னு நான் கணக்கு வெச்சிக்க வேணாமா? நான் பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு டெபாஸிட்டை காலி பண்ணிட்டிருங்க..."

"டேய்"

"உஸ்ஸ்... இப்ப என்ன நான் மறுபடி உன் கூட தேர்தல்ல நிக்கனுமா?... வாடா வா நிக்கலாம்.. "

"அய்ய உன் கூட யார்றா தேர்தல்ல நிப்பாங்க? தூ..."

"அப்படி துப்பிட்டு கிளம்ப பாரு... ஊர்ல பெரிய பெரிய கட்சி தலைவர்லாம் என்ன மாதிரி ஆளுங்க கிட்ட மோதி தேர்தல்ல நிக்க முடியாம ஊரை காலி பண்ணிட்டு ஓடி போயிட்டான்... நீ எங்கயோ டாஸ்மாக்குல தண்ணியடிச்சுட்டு வந்துட்டு என் கிட்ட மோத பாக்குறயா?


அப்போது அங்கே ஒரு ஜீப் வருகிறது...

ஜீப்பில் இருந்து இறங்கிய அலுவலர்..


" யே காசு சொடுத்து ஓட்டு வாங்கிட்டு எல்லா கட்சி ஆளுங்களும் இங்கே தான் இருக்கீங்களா?
எல்லாம் ஜீப்புல ஏறுங்க... தேர்தல் அதிகாரி கூப்பிடுறாரு..."

அனைவரும் முனகிய படி ஜீப்பில் ஏற, அந்த நடிகரும் ஜீப்பில் தொற்றி கொள்ள முயற்சிக்கிறார்...

"ஏய் கட்சி ஆளுங்களை ஏத்த சொல்ல யாருய்யா நீ கோமாளி இங்கே வந்து ஏர்ற?"

"யோவ் நானும் கட்சித்தலைவர் தான்யா..."

"கட்சித்தலைவரா.. இந்த ஏரியாவுல நான் உன்னை பார்த்ததே இல்லை?"

"அவனுங்களுக்கு சரிக்கு சமமா பிரச்சாரம் எல்லாம் பண்ணினே நீ பார்க்கலையா..?"

"பிரச்சாரம் பண்ணா நீ கட்சி தலைவரா?.. யோவ் சொன்னா கேளு… ஏறாதய்யா"

"அங்கங்க கட்சித்தலைவருங்களை பிடிச்சு உள்ள போடற கலவரமான நேரத்துல வாண்ட்டடா வந்து கட்சி நடத்தறேன்னு சொல்றேன்... நம்ப மாட்டேங்கறயே..."

பலவந்தமாக அலுவலரை பிடித்து தள்ளி தானும் ஜீப்பில் தொற்றிக்கொள்கிறார்

"ஏய் எல்லாரும் பாத்துக்குங்க.. நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நானும் கட்சித்தலைவர் தான்..”


சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் தலையிலடித்து கொள்கிறார்கள்

F9 விசையும், படியெடுத்து ஒட்டலும்

அலுவலகங்களில் நடக்கும் கூத்துக்களுக்கு அளவே கிடையாது...

புதிதாக வேலைக்கு சேரும் நண்பர்கள் செய்யும் அழும்புகளுக்கு அளவே இருக்காது...

அவர்கள் தானே கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸியமாக இருக்கும்...

நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருந்த போது கிடைத்த சில நகைச்சுவை சம்பவங்கள்...

ஒரு நண்பர் புதிதாக சேர்ந்த தன்னுடைய உதவியாளருக்கு வேலை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். புதிதாக சேர்ந்த உதவியாளருக்கு கணினி பற்றி எதுவுமே தெரியாது... அது நண்பருக்கு தெரியாது...

ஒரு குறிப்பிட்ட திரையை வரவழைக்க "F9" விசையை அழுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு, காபி எடுக்க நகர்ந்தார். காபியை எடுத்துக் கொண்டு அப்படியே ஒரு ஃப்ளோர் வாக் செய்து விட்டு வந்தார்.

நம் புதிய உதவியாளர் ஏதோ சீரியஸாக முயற்சித்துக் கொண்டிருந்தார்.

என்ன தான் செய்கிறார் என்று பார்க்கும் ஆர்வத்தில் அருகே போனால், இரண்டு கைகளையும் உபயோகித்து ஏதோ விசைகளை அழுத்தி தலையை இடமும் வலமுமாக ஆட்டி கொண்டிருக்க, நண்பருக்கு கலவரமாகி விட்டது.

"என்னப்பா பண்றே?"

"சார்... எஃப் நைன் பிரஸ் பண்ணா அந்த விண்டோ ஓபன் ஆகும்னு சொன்னீங்க இல்ல?"

"ஆமா"

"இப்ப எஃபையும், நைனையும் ஒண்ணா பிரஸ் பண்ணா ஓபன் ஆக மாட்டேங்குது சார்..."

நண்பர் வெலவெலத்து போய் விட்டார்.

(இப்ப மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கி கொடுத்தா வரமாட்டேங்கிறாங்க சார்... நீங்களே பார்த்து ஒரு பைசல் பண்ணுங்க... நடிகர் செந்திலின் புகழ்பேற்ற வசனம்)

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

என்னுடைய மற்றொரு நண்பரது அலுவலகத்தில் ஒரு பெண் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார்.

அது ஒரு கோப்புகள் சரி பார்க்கும் நிறுவனம்.. இரண்டு திரைகள் அருகருகே வைக்கப்பட்டு இரண்டு கணினிகளின் துணையோடு வேலை நடக்கும்.

அந்த பெண் இதற்கு முன் கணினியில் வேலை பார்த்த அனுபவம் மிக குறைவு.

வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாள், நண்பர் புது பெண்ணின் டெஸ்க் வழியாக செல்லும் போது அந்த பெண் இரண்டு விசை பலகையிலும் மாற்றி மாற்றி ஏதோ செய்து கொண்டிருப்பது கண்டு...

"என்னம்மா?" என்று கேட்டிருக்கிறார்..

"என்ன பிராப்ளம்னே தெரியலை சார்.. காப்பி பேஸ்ட் ஆக மாட்டேங்குது" என்றிருக்கிறார்...

"அப்படியா எங்க நான் செக் பண்ணட்டும், இப்ப ட்ரை பண்ணுங்க?" என்றப்டி ஆர்வமுடன் கிட்டே சென்றவர்,

அந்த பெண் ஒரு கணினியில் காப்பி செய்து மற்றொரு கணினியில் பேஸ்ட் செய்ய முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்து அடைந்த பீதி சொல்லி மாளாது...

ஞாயிறு, ஜனவரி 04, 2009

அப்பாக்கள் படும் பாடு

பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க வரிசையில் நிற்கும் பெற்றோர்கள்.

பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்று எண்ணும் இவர்களின் நல்ல உள்ளத்தை பாரட்ட வேண்டிய அதே வேளையில் சில குறிப்பிட்ட பள்ளிகளில் படித்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அறியாமையையும், சிலர் வெறும் சமூக அந்தஸ்துக்காக அப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் அவலத்தையும் கண்டிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்..

யார் என்ன சொன்னாலும் எல்.கே.ஜி சீட் வாங்குவதற்கு நம் பொது ஜனங்கள் படும் பாடு இருக்கிறதே...

நீண்ட கியூவில் இரண்டு நாள் நிற்பதில் ஆரம்பித்து, அப்பா அம்மாவுக்கு வைக்க படும் இண்டர்வியூ, பள்ளிகளின் வினோதமான நிபந்தனைகள் வரை செய்தி தாள்கள் படம் போட்டு கிண்டல் செய்யுமளவுக்கு செம கேலிக்கூத்து.... (இதை மையமாக வைத்து ஒரு தமிழ் படமே வந்திருக்கிறது)

எல் கே ஜி சீட் வாங்க அப்போகாலிப்டோ ஹீரோ போல அப்பாக்கள் ஒடும் இதற்கு "அப்பா"-"காலி"-இப்போ என்று பேர் வைக்கலாமா?

அதையே கொஞ்சம் மிகைப்படுத்தி பார்த்த போது உதித்தவை கீழ்க்காணும் துணுக்குகள்…………..

* * * * * * * * * * * * * * * * * * *

ஏன்யா இப்படி வாயிலேருந்து ரத்தம் வர்ற அளவுக்கு பல் தேய்க்கறீங்க...

க்யூல நிக்கிற அப்பா அம்மாக்கள்ல யாருக்கு சுத்தமான பழக்க வழக்கம் இருக்கோ அவங்க பசங்களுக்கு தான் ஸீட்னு எவனோ புரளியை கிளப்பிட்டானாம்...

* * * * * * * * * * * * * * * * *

ஏம்மா வென்னீர் ரெடியா? 4 மணிக்கெல்லாம் குளிச்சுட்டு நம்ம நுங்கம்பாக்கத்துல இருந்து கிளம்பினா தான் அண்ணா நகர் போய் சேர்ந்து கியூல நிற்க சரியா இருக்கும்...

தேவையில்லைங்க... கியூ நம்ம தெரு முனை வரை வந்துடுச்சு... மெதுவா ரெடியாகுங்க… இன்னும் கால் மணி நேரத்துல வீட்டு வாசல்ல இருந்தே நின்னுக்கலாம்...

* * * * * * * * * * * * * * * * * * *

ஏன்டாப்பா உனக்கு நேத்து தானே கல்யாணம் முடிஞ்சது? எல் கே ஜி அப்ளிகேஷன் வாங்கறதுக்கு கியூல நிக்கற?

இப்பவே டிரெயினிங் எடுத்துக்கிறேன் மாமா.. என் மாமனார் ஏற்பாடு...

* * * * * * * * * * * * * * * * * * *

பள்ளி நிர்வாகி - சார்.. பசங்க கண்டிப்பா ஸ்கூல் பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. அப்ப தான் பசங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இருக்காது... ஆனா உங்க கிட்ட கண்டிப்பா கார் இருக்கணும் அப்ப தான் ஸீட் கொடுப்போம்...

குழந்தையின் அப்பா- ???*&*^*#$#??

* * * * * * * * * * * * * * * * * * * * *
ஏங்க உங்க 3 வயசு பையன் உங்களை இப்படி திட்டறான்?

அவனோட எல்.கே.ஜி இண்டர்வியூல 2-3 கேள்விக்கு தப்பா பதில் சொல்லிட்டேன்... அதான்.. ஹி..ஹி..

* * * * * * * * * * * * * * * * * * * * * *
அந்த வாரபத்திரிகைக்கு திடீர்னு என்ன அவ்ளோ கிராக்கியாயிடுச்சு

இந்த வார இஸ்யூவோட அதிர்ஷ்ட போட்டில ஜெயிகிறவங்களுக்கு பரிசா எல்.கே.ஜி சீட் தர்றாங்களாம்...

* * * * * * * * * * * * * * * * * * * * * *

நகை பணம் எதுவும் வேணாம்னு சொல்லியும் ஏன் அந்த வரனை வேணாம்னு சொல்லிட்டே

பின்னே? நகை பணம் வேணாமாம். ஆனா பொண்ணுக்கு குழந்தை பிறந்தா எல்.கே.ஜி ஸீட் நாங்க வாங்கி கொடுக்கணுமாம்...

* * * * * * * * * * * * * * * * * * * * *
என்னய்யா உன் வீட்டுல திடீர்னு இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்ததுன்னு கேள்வி பட்டேன்?

ஆமாங்க... என் ரெட்டை குழந்தைகளை போன வாரம் எல்.கே.ஜியில சேர்த்த விஷயத்தை எவனோ வேண்டாதவன் ஐ.டி. டிபார்ட்மென்ட்ல போட்டு கொடுத்திருக்கான்....

* * * * * * * * * * * * * * * * * * * * * * *

அந்த ஸ்கூலால உங்க வாழ்க்கையே நாசமா போச்சா? எப்படி?

பின்னே? அந்த ஸ்கூல்ல ஸீட் கிடைக்கணும்னா அப்பா அம்மா ரெண்டு பேரும் போஸ்ட் கிராஜுவேஷன் படிச்சிருக்கனும்னு சொன்னதை கேட்டு என் போண்டாட்டி என்னை டைவேர்ஸ் பண்ணிட்டு படிச்ச வேற ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டாய்யா...

* * * * * * * * * * * * * * * * * * * * * * *