உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஜனவரி 27, 2009

ஆளுமைகள்

என் வீட்டருகே ஒரு நண்பர் வசிக்கிறார்.. அவருக்கு ஒரு விநோதமான பழக்கம் இருக்கிறது...

என்ன பழக்கம் என்கிறீர்களா? சினிமா பார்க்கும் பழக்கம்... இது விநோதமான பழக்கமா என்கிறீர்களா?

அதில் ஒரு விஷேசம் இருக்கிறது...


நண்பர் ஆர்வமாக புது, பழைய எல்லா மொழி திரைப்படங்களும் பார்க்க கிளம்பி விடுவார்...

திரையரங்கு எவ்வளவு தூரமானாலும் சரி... என்ன வசதி இருந்தாலும் சரி... இல்லையென்றாலும் சரி… ஆர்வமாக சென்று படம் பார்ப்பார்...

ஆனால் முதல் பத்து- இருபது நிமிடம் தான் படம் பார்ப்பார்... அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வந்து விடுவார்... எவ்வளவு சுவாரஸியமான படம் என்றாலும் பத்து- இருபது நிமிடம் தான்...

இண்டர்வெலுக்கு 15 நிமிடம் முன்பு பிட் போடப்படும் படமானாலும் சரி... அண்ணன் 10-20 நிமிடங்கள் தான் படம் பார்ப்பார்…

கூட வரும் நண்பர்கள் வந்தாலும் சரி, வரவில்லையென்றாலும் சரி... இவர் மட்டுமாவது கிளம்பி விடுவார்...

ஏதோ ஒரு தமிழ் படத்தை அதிக பட்சமாக இண்டர்வெல் வரை பார்த்த ஒர் உடைக்கப்படாத ரெக்கார்டு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்களை சினிமாவுக்கு அழைத்தாலும் "இண்டர்வெல் வரைக்கும் படம் பார்க்கலாம் வர்றியா” என்று அழைப்பது தான் தலைவருக்கு வழக்கம்...

இப்போது திருமணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது... ஆளை பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது... திருந்தி விட்டாரா என்று தெரியவில்லை...

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நானும் என் நண்பனும் தணிக்கை நிறுவனத்தில் பயிற்சிக்காக வேலை பார்த்து கொண்டிருந்த போது, ஒரு மத்திய அரசு நிறுவனத்தில்-ல் வணிக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த நேரம்..

நானும், நண்பனும் காலையில் 10 மணிக்கு உள்ளே போனால் மாலை 4 மணி வரை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுவோம்.. ஹைதர் அலி காலத்து கணினியும், டாட் மாட்ரிக்ஸ் பிரிண்ட் அவுட்களையும் நம்பி காலந்தள்ளும் பல மத்திய அரசு நிறுவனங்களுள் அதுவும் ஒன்று...

மொத்தம் 15 அலுவலர்கள் தான் இருப்பர்கள்... ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டு.. ஒரு அரசு அலுவலகம் என்றால்... ஒருவர் அல்லது இருவர் தான் அலுவலகத்தின் 80 விழுக்காடு பணிகளை செய்வர்... மீதம் உள்ள அனைவரும் சும்மா "டம்மி பீஸ்" தான்...

இங்கேயும் அப்படி தான்... ஒரே ஒரு அனுபவம் மிக்க எழுத்தர் எல்லா பணிகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்வார்... மீதம் உள்ள முக்கால்வாசி பேர் குழுக்களாக பிரிந்து அரசியல் விவாதங்கள், சினிமா செய்திகள், தேநீர் கடைகளின் வியாபரத்தை பெருக்குதல் போன்ற அதிமுக்கிய தேசிய பணிகளில் ஈடுபாட்டுடன் செய்வார்கள்…

போன மூன்றாவது நாளில் தான் நம் பதிவின் நோக்கமான அந்த முக்கியமான அலுவலரை பார்த்தோம்... அவர் ஆள் நான்கரை அடி உயரம் இருப்பார்... ஒல்லியான தேகம்... குழுக்களில் எப்போதாவது தான் பங்கெடுப்பார்.. தான் உண்டு தன் வேலை உண்டு(இல்லை) என்று அமைதியாக அமர்ந்திருப்பார்...

எப்போதும் அந்த எப்போது இடிந்தும் விழுமோ என்றிருக்கும் கட்டிடத்தின் மோட்டு வலையை பார்த்தபடி ஏதாவது பலத்த சிந்தனையில் இருப்பார்...

நானும் நண்பரும் சேர்ந்து எங்கள் பங்குக்கு ஏதாவது பேசிக்கொண்டு செம அரட்டையில் இருப்போம்.(ஆனால் வேலையும் பார்ப்போம்... நாங்கள் வேலை செய்த்து தனியார் தணிக்கை நிறுவனம். மத்திய அரசு நிறுவனம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க).

ஒரு நாள் அலுவலகத்தில் யாரும் இல்லை... எல்லோரும் பக்கத்து தேநீர் கடைக்காரரின் வியாபாரத்தை தூக்கி நிறுத்த போயிருந்தார்கள். நான், நண்பர் மற்றும் நம் முக்கியமான அலுவலர், அலுவலகத்தை தாங்கி பிடிக்கும் மூத்த அலுவலர் நான்கு பேர் தான் இருந்தோம்... வழக்கம் போல மோட்டு வலையை பார்த்து கொண்டே அமர்ந்திருந்த நம் அலுவலர் சட்டென்று தலையை வலது பக்கம் திருப்பி மேல் நொக்கி பார்த்தார்...

அவர் பார்த்த திசையில் அவர் வலது கையை உயர்த்தினார்...சுட்டு விரல் நடு விரல் மட்டும் நீட்டி... புறங்கையை வாயருகே வைத்து ப்ளையிங்க கிஸ்ஸாக பறக்க விட ஆரம்பித்தார்....

ஒரு முறை இரு முறை அல்ல... ஒரு ஏழெட்டு முறை... திடீரென அவர் பார்த்த எனக்கும், நண்பருக்கும் தூக்கி வாரி போட்டு விட்டது...

கலவரமாக திரும்பி மூத்த அலுவலரை பார்த்தோம்.. அவர் எதையும் கண்டும் காணாமல் வேலையிம் மூழ்கியிருந்தார்...

அவருக்கு வலிப்பு ஏதாவது வந்து விட்டதா, இல்லை அமாவாசை, பௌர்ணமிக்கு இப்படி தான் நடந்து கொள்வாரா என்று புரியாமல்... திகைத்து போய் அமர்ந்திருந்த வேளையில் வெளியில் போன ஆட்கள் வந்து விடவும், எங்களுக்கு கொஞ்சம் திகில் அடங்கியது...

எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.. மாலையில் எங்கள் ஆடிட்டர் வந்தவுடன் அவரிடம் சொன்னோம்... பெரிதாக சிரித்தார்...

"பார்த்துட்டீங்களா? நானே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்... உங்களுக்காவது பரவாயில்லைப்பா.. நான் முதல்ல இதை பார்த்த அன்னைக்கு நானும் அவரும் தனியா பேசிட்டிருந்தோம்... வியர்த்து விறுவிறுத்து போயிட்டேன்... அப்புறம் எல்லார்ட்டயும் விசாரிச்சேன்... அவரு யாரையும் இதுவரைக்கும் அடிச்சு கிடிச்சு எதுவும் பண்ணதில்லையாம்..." என்று ஜோக்கடித்து விட்டு,

"அவருக்கு அப்படி பண்றது சென்டிமெண்ட்டாம்பா.. நினைச்சது நடக்கணும்னா.. நினைச்சவுடனே இப்படி பண்ணா நினைச்சது நடக்குமாம்..."

என்று முடித்தார்...

அந்த சென்ட்டிமெண்டில் இடி விழ...

அங்கே தணிக்கையில் இருந்த ஆறு மாதமும் எங்களுக்கு அல்லு இல்லை...

1 கருத்து:

  1. அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்களை சினிமாவுக்கு அழைத்தாலும் "இண்டர்வெல் வரைக்கும் படம் பார்க்கலாம் வர்றியா” என்று அழைப்பது தான் தலைவருக்கு வழக்கம்...
    //

    நல்லா படம் பாக்கிறாரு!!!
    மருக்கா போய் மிச்சம் பாப்பாறோ?

    தேவா......

    பதிலளிநீக்கு