உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஜூன் 16, 2009

கேள்விகள்

நம்மைச் சுற்றி நடக்கும் எவ்வளவோ அநியாயங்களுக்கு நம்மையும் அறியாமல் நாம் பழக்கப் படுத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்.

ஒரு அநியாய சம்பவம் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் எல்லோரிலும் நான் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என தயக்கம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒரு அரசு ஊழியர் கடமையை செய்ய மறுக்கிறார் என் வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் தட்டி கேட்க விழைகிறோம்? நமக்குள்ளேயே சத்தம் போட்டு போட்டு நமக்கு ஒரு சமுதாய செவிட்டு தன்மையே வந்து விடுகிறது...

ஒரு தலைவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறான் என்று சொன்னால், மற்றவர்கள் சேர்ப்பதில்லையா, அவரை பாருங்கள், இவரை பாருங்கள் என்று சொல்லும் தொண்டர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள்.

நம் தலைவர் இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று தனக்கு தானே கூட கேட்டு கொள்ள அவர்கள் தயாராயில்லை.. ஏன்?

என்ன தயக்கம்? தலைவர்கள் தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போதும், ஏன் நாம் அதை எதிர்த்து ஒன்றுமே செய்வதில்லை...

இந்த சமுதாயம், இந்த சமுதாயம் என்று நாம் முன்னிலையில் வைத்து பேசும் சமுதாயமே நாம் தான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

சமுதாயத்தில் தவறுகள் நடக்கிறது என்று சொல்வோமானால் நாம் தான் தவறு செய்துக் கொண்டிருப்பதாக அர்த்தம்.

நாம் செய்யும் சிறு போக்குவரத்து விதிமுறை மீறல், வரி ஏய்ப்பு, சிறு குற்றங்கள் நாம் அறிந்து செய்யாவிட்டாலும், நம் அறிவுக்கு அவை தவறு என்று நன்றாகவே தெரியும்.

வோட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை தட்டி கேட்க விழைய மாட்டார்கள்.

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்யும் பெரும் மக்கள் கூட்டம் அதானாலேயே மேற்கூறிய தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கின்றனரோ?

மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க போனால் நான் செய்த, செய்யும் இந்த விதிமுறை மீறலை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் தான் பெரும்பாலானவர்களை தவறு நடக்கும் போது கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது என்று எனக்கு படுகிறது...

சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்து பழகுவதால் தான், பெரிய தவறுகள் நடக்கும் போது அவை நமக்கு உறுத்தலாக தோன்றுவதில்லை.

போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில் ஆரம்பித்து, வரிகளை ஒழுங்காக கட்டுவது, சிறு சிறு விதிமுறைகளை (உ-ம் வரிசையில் செல்லுதல்) மதித்து நடப்பது போன்றவற்றை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் நாட்டில் தவறுகள் குறைய தொடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக