உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, ஜூலை 19, 2009

மாயப் பலகை 19.07.09

ஒன்றரையணா சம்பளத்துக்கு பார்க்கும் வேலைக்கே பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல், ரேட்டிங்க் எல்லா எழவு கருமாந்திரமும் எடுத்துத் தொலைக்கும் இந்த காலத்தில், 5 வருட காலம் நாட்டை ஆளும் மந்திகளுக்கும், எம்.பி -களுக்கும், எம்.எல்.ஏக் களுக்கும் ஏன் எதுவுமே இல்லை?

டுபாக்கூர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் வெற்றுப் பயல்கள் கூட கோல் செட்டிங்க், டார்கெட் என்று காற்றில் கணக்கு போட்டுக் கொண்டு அலையும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு ஏன் அப்படி எதுவும் இல்லை?

****************************************************************************************
ஒரு காலத்தில் ஒரு தொலைப்பேசி இணைப்பு வாங்க வேண்டுமென்றால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்...

தொலைப்பேசி இலாகா ஜே.ஈ, ஏ.ஈ எல்லாம் கடவுள் போல... அவர்களை சாதாரண வாடிக்கையாளர்கள் பார்க்க கூட முடியாத காலம் எல்லாம் இருந்தது.....
எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இணைப்புக்கு சிபாரிசு செய்து பணம் பார்த்த காலம் எல்லாம் கூட இருந்தது...

தனியார் நிறுவனம் எல்லாம் களத்தில் குதித்திருக்கா விட்டால் இன்று நாமெல்லாம் அலைபேசியோடு அலைந்து கொண்டிருப்போமா என்பதே சந்தேகம் தான்...
இந்த தனியார் போட்டியால் திருந்திய இன்னும் சில அரசுத் துறைகள் உள்ளன..

வங்கிகள்... அட சாமி இவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? வாடிக்கையாளர்கள் தான் முதலாளிகள் என்று இவர்களுக்கு புரிய உலகத்தின் பல வங்கிகள் இங்கே வந்து சேவை செய்து காண்பிக்க வேண்டியிருந்தது...

எனக்கு தெரிந்த ஒரு வங்கி ஊழியர் அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணி புரிந்து வந்தார்.. அவருடைய வேலை.. கிளிரயன்ஸுக்கு வரும் 10 செக்குகளுக்கு சீல் போட்டு லெட்ஜரில் என்ட்ரி போடுவது மட்டும் தான்.. ஆனால் அவர் கையில் எப்போதும் ஒரு ப்ரீஃப்கேஸ் இருக்கும்.. அதற்குள் குமுதம், ஆவி, ஜூவி, கல்கண்டு, சாவி, கல்கி உள்ளிட்ட இன்னபிற வாராந்திர, மாதாந்திர வஸ்துக்கள் அடுக்க பட்டிருக்கும்...

செக்குக்கு சீல் போட்ட கையோடு தலைவர் அவைகளுக்கும் சீல் போடுவார்... யார் புத்தகத்தை சொன்ன நேரத்துக்கு திருப்பி தர வில்லையோ அவர்களிடம் சண்டை போடுவார்.... இப்படி வாடிக்கையாளர்களுக்காக உழையோ உழையென்று உழைப்பார்...

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலேயும், வங்கியிலேயும் நன்றாக வேலை பார்க்க தெரிந்த, பார்க்க முன்வரும் இளிச்சவாய் அலுவலர் ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள்... அவர்களால் தான் அந்த அலுவலகமே ஓடிக் கொண்டிருக்கும்...

தொலைகாட்சி (தூர்தர்ஷன்)....
என்ன பாடு படுத்தினார்கள்... தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்ப்பதென்றாலே அவர்கள் இஷ்டத்துக்கு தான் காண்பிப்பார்கள்..

தொலைக்காட்சியில் தோன்றுவதென்றால்.. அய்யோ... ஒருவர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி செய்கிறார் என்றால்.. அவார் நிஜமாகவே பிரபலம் அல்லது இயக்குநருக்கு வேண்டப்பட்டவர் என்று அர்த்தம்...

தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு அய்யகோ.. தூர்தர்ஷன் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை...


சொல்லி கொண்டே போகலாம்.. என்ன தான் பசில தனியார் நிறுவனங்கள் சொதப்பினாலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும், அணுகுமுறையும் அரசுத்துறைகள் நடத்தும் நிறுவனங்களிடம் வர வில்லை என்பதே உண்மை..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக