உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

திங்கள், ஜூலை 06, 2009

வரிப்பணமும், வழிப்பறியும்

எனக்கொரு விஷயம் ரொம்ப நாளாக புரியவில்லை...

நாம் வரிக்கட்டுகிறோம்...


வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, வணிக வரி(இது வணிகர்கள் தானாக கட்டுவதல்ல. நம்மிடம் பிடித்தம் செய்து கட்டுவது).

இது போக இன்னும் என்னென்னவோ வரிகள்....

சாலை வரியும் அவற்றுள் ஒன்று....

நாம் கட்டும் அத்தனை வரிகளும் மத்திய மாநில அரசுகள் மக்களாகிய நமக்கு தேவையான வசதிகளை பெருக்குவதற்கும், நமக்கு தேவையான வாழ்வாதாரங்களை உண்டாக்குவதற்கும், நம் நாட்டை பகைவர்களிடமும், தீவிரவாதிகளிடமும் இருந்து தற்காத்து கொள்ளவும், நாட்டு முன்னேற்ற பணிகளை செய்யவும் பயன்படுத்தப் படுகிறது எனக் கூறப்படுகிறது...

(நாட்டு முன்னேற்ற பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு பணியாளர்கள், ராணுவம், காவல் அனைத்து துறை சம்பளங்களும் உள்ளிணைந்து...)

இப்படி இருக்க,

சாலை அமைத்தலும், பராமரித்தலும் அரசாங்கத்தின் அடிப்படை கடமை தானே?

புறவழிச்சாலை அமைக்கும் போதும், விரைவு வழிசாலை அமைக்கும் போதும், முக்கிய பாலங்கள் கட்டும் போதும்..

அதை கடக்க ஒவ்வொரு முறைக்கும் வாகனங்களிடம் ஏன் கட்டணம் வசூலிக்கபடுகிறது?

சாலை வரியும் கட்டி விட்டு, வருமான வரி மற்றும் இன்னபிற வரிகளையும் கட்டி விட்டு, நாம் ஏன் நம் வரிப் பணத்தில் அரசாங்கம் போட்ட சாலையில், நாம் செல்ல கட்டணம் கட்ட வேண்டும்?

எனக்கு புரியவில்லை...


இதை எப்படி அரசாங்கம் நியாயப்படுத்துகிறது?

இதை எதிர்க்கும் இயக்கம் ஏதாவது இருக்கிறதா?

வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா?

யாராவது தெரிந்தவர்கள் விளக்குவார்களா?


(நாம் போகின்ற வழியில் வாங்குகின்ற அநியாய கட்டணமான இவற்றை வழிப்பறி என்று சொல்லலாமா?)

பிற்சேர்க்கை-சென்ற வாரத்தில் மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலையில் சுங்க கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக