உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஏப்ரல் 08, 2010

ஸ்ரீசாந்த்- விளையாட்டுப் பிள்ளை

கவுண்டமணி சிலப்படங்களில் செந்திலைப் பார்த்து சொல்லுவார்.. "அது என்னவோ தெரியலைங்க.. அந்த மூஞ்சிய பார்த்தாலே நல்லா அப்பு அப்புன்னு அப்பணும் போல இருக்கு"

அது போல இந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை பார்த்தாலே எனக்கு அப்பு அப்பென்று அப்ப வேண்டும் போல தோன்றுகிறது...

இவர் அப்படியொன்றும் சாதாரண ஆளில்லை.. பெரிய பெரிய சாதனைகள் பலப் படைத்தவர்... "வார்னிங்" பெறுவதில்...

அநேகமாக உலகின் எல்லா அம்பயர்களும் இவரை "வார்ன்" செய்தி இருப்பார்கள் என்று தோன்றுகிறது...

பொதுவாக பேஸ் போலர்கள் பந்து வீசி விட்டு பேட்ஸ்மேனை முறைப்பது எல்லாம் கிரிக்கெட்டில் சகஜம். எதிராளியின் மன உறுதியை குலைப்பதற்கு அதையே ஒரு ஆயுதமாக அநேகமாக எல்லா பந்து வீச்சாளர்களும் பயன் படுத்துவார்கள்.

ஆனால் இவர் தேவையில்லாம் ஆக்ரோஷம் என்ற பெயரில், எதிரணி ஆட்டக்காரர்களை முறைப்பது, திட்டுவது போன்ற செயலகளில் ஈடுபடுகிறார்.. உலகெங்கிலும் இதுபோல நிறைய ஆட்டக்காரர்கள் நடந்து கொள்வது உண்டு என்ற போதிலும்.. IPL மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் சக இந்திய ஆட்டக்காரர்களிடம் அவர் காட்டும் ஆக்ரோஷமும், அபத்தமான சைககளும் தேவையற்றது என்றே தோன்றுகிறது...






இவர் ஆடிய “Booty Dance” யூ ட்யூப் காணொளி தளத்தில் மிகப்பிரபலமானது.






ஒரு தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி விட்டு இவர் செய்த அளப்பறையை பார்த்து முகம் சுளிக்காதவர்களே இருந்திருக்க முடியாது...





சைமெண்ட்ஸிடமும், ஹேய்டனிடமும் இவர் செய்த சைகைகள், சேட்டைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின...






இவரை விட பெரிய கோபக்காரரான இன்ஜமாமிடம் எப்படி வாய்விட்டு பின் பம்முகிறார் என்று பாருங்கள்...


கோபத்தை கொஞ்சம் கூட கட்டுப் படுத்தத் தெரியாமல்.. ஏடாகூடமாக ஏதாவது செய்து பல உள்ளூர் போட்டிகளிலும் தண்டனை அடைந்துள்ளார்.. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த அக்டோபர் மாதம் இவரது நடத்தையை கண்டித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை BCCஈ வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது...

சென்ற IPL-ல் தன் நடத்தைக்கு ஹர்பஜனிடம் ஒரு அறையை பரிசாக பெற்றார்..
எனக்கு தெரிந்து இவரது நன்னடத்தைக்காகவே இவரை இந்த வருட உலகக்கோப்பைக்கான 20-20 அணியிலிருந்து கழட்டி விட்டிருப்பார்கள் என்று நினைக்க தோன்றுகிறது..
இவ்வளவு நடந்தும் இவர் இன்னும் திருந்திய பாடில்லை.. நேற்று நடந்த ஒரு IPL போட்டியில் 3 ஓவரில் 40 ரன்களை வாரிக்கொடுத்த கடுப்பிலும், வரிசையாக இரண்டு நோ பால வீசிய கடுப்பிலும் "தோடா நாட்டாமை வந்துட்டாரு தீர்ப்பு சொல்ல" என்கிற ரேஞ்சில் நடுவரை பார்த்து கைத்தட்டியிருக்கிறார்...

இதைப் பார்த்துக் கடுப்பான அவருடைய சக வீரர் யுவராஜ் சிங் ஸ்ரீசாந்தை அழைத்து, கண்டிக்கும் அளவுக்கு அவரது நடத்தை அமைந்தது.. எதிர்ப்பார்க்கப் பட்டது போலவே ஸ்ரீசாந்துக்கு அபராதம் விதிக்கப் பட்டது.. எனக்கு தெரிந்த வரையில் அவர் அபராதம் கட்டிய எண்ணிக்கை அவர் இதுவரை எடுத்த விக்கெட் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்...

உடனே யாராவது ஸ்ரீசாந்தை மட்டும் குறை சொல்கிறீர்களே, அவரை பாருங்கள் இவரைப் பாருங்கள் அது நியாயமா, இது நியாயமா என எண்ணக் கூடும்..

அடுத்த நாட்டு வீரன் ஏதோ செய்து விட்டு போகட்டும்.. அவன் நாட்டு மக்களுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கட்டும் எனக்கு அதில் அக்கறை கிடையாது...
என்னைப் பொருத்த வரை இவரைப் போன்ற போட்டியாளர்களை வைத்துத் தான் என்னையும், உங்களையும், நம் மக்கள் அனைவரையும் வேற்று நாட்டு ரசிகன் எடைப் போடுவான்...

நாமும் ஒரு வரையறைக்குள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் தவறே கிடையாது.. ஆனால் ஸ்ரீசாந்த் செய்வது கொஞ்சம் ஓவர் தான்..

110 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் 11 பேருக்கு தான் கிரிக்கெட் போட்டியில் ஆட இடம் கிடைக்கிறது.. இவரைப் போன்ற வீரர்கள் தான் நம் நாட்டின் மதிப்பை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகள்.. அதில் அவர்கள் தவறு செய்துக் கொண்டே இருந்து நாட்டின் மதிப்பை குறைப்பார்களேயானால் குறைச் சொல்ல தான் தோன்றும்..


Bonus Video

2 கருத்துகள்:

  1. Well Said. He deserves more severe punishments like ban for 1 or 2 years for misconduct

    பதிலளிநீக்கு
  2. //என்னைப் பொருத்த வரை இவரைப் போன்ற போட்டியாளர்களை வைத்துத் தான் என்னையும், உங்களையும், நம் மக்கள் அனைவரையும் வேற்று நாட்டு ரசிகன் எடைப் போடுவான்...//

    அதுவென்னவோ உண்மைதாங்க

    பதிலளிநீக்கு