உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், நவம்பர் 17, 2010

மழை- ஒரு அற்புதமான அனுபவம் -சென்னைக்கு மட்டும் பூச்சாண்டி-மீள் பதிவு

மழை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் சென்னை மாதிரி ஒரு நகரத்தில் இருந்து கொண்டு மழை பிடிக்கும் என்று சொல்வதற்கு ஒரு தில் வேணும்யா...



காரணமா?

சேற்று குழம்பாகிவிடும் சாலைகள்...

தெப்பக் குளமாகிவிடும் வீதிகள்...

கொசு உற்பத்திச்சாலைகளாகும் சாக்கடைகள் (மலேரியா உள்பட பல பயங்கர ஜூரங்களை உருவாக்கும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தி ஆகுமென்பதை அறிக)...

பயங்கர ஜூரங்கள் (டெங்கு, மலேரியா வந்து குளிர்ல ரெண்டு தடவை பிரேக் டான்ஸ் ஆடினா நான் சொல்ற பயங்கர ஜூரத்துக்கு அர்த்தம் புரியும்),


டூ வீலர் ஸ்கிட்டுகள் (விழுந்து எழுந்து சப்பாணி கமல் மாதிரி போகிற சுகமே சுகம்னு சொல்றீங்களா?.. நமக்கு விருது எல்லாம் கிடையாதுங்க.. பஞ்சரும், டிஞ்சரும் தான்),

பன்னீர் தெளிப்பது போல சேறு தெளிக்கும் பஸ்கள்,


வேரோடு சாய்ந்து ரோடு மறியல் செய்யும் மரங்கள்..


செருப்பை போட்டுக்கொண்டு மேலே சேறடிக்காமல் நடக்க ரொம்ப பயிற்சி வேணுமப்பு... (ரோட்டில் செல்லும் டூ வீலர், ஆட்டோ வேகமாய் சென்று அடிக்கும் சேறு இந்த கணக்கில் வராது)


இடுப்பளவு தண்ணீரில் பள்ளிச்செல்லும் குழந்தையை (புத்தக மூட்டையோடு) தலைக்கு மேல் அனாயசாமாக தூக்கி கொண்டு நடக்க திராணி வேண்டும்....


வீட்டுக்குள் தண்ணீர் புகும் பட்சத்தில் கட்டில் மேல் உட்கார்ந்த படி குடும்பம் நடத்த தெரிய வேண்டும்...

சென்ற வருடம் சென்னை முழுக்க மழை பண்ணாத அட்டகாசம் இல்லை...


மழையை சமாளிக்க மக்கள் குறளி வித்தைகள் காட்ட வேண்டியிருந்தது... பல இடங்களில் எதுவுமே எடுபடாமல் மழை காட்டிய வித்தைகளை மக்கள் பார்க்க வேண்டியதாயிற்று...


இந்த வருட மழையை சமாளிக்க அரசாங்கம் ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரியும் தெரியவில்லை... (மழைநீர் கால்வாய்கள் அடைப்பு நீக்குதல், ரோடுகளின் குண்டு குழிகளை சரி செய்தல், மழை நீர் தேங்காமல் தடுக்க அமைக்கப்பட்ட வழிகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல்.. ம்ஹூம்)


என்ன செய்ய எல்லோரும் தயாராகிக் கொள்ள வேண்டியது தான்.. காரில் போகும் அரசாங்க, அரசியல் சீமான்களுக்கு கால்நடைகளின் கூச்சல் கேட்கப் போகிறதா என்ன? ஹூம் பார்க்கலாம்...






(கால்நடை - நாம தாங்க.. கால்நடையா போறோம்ல)

பின்குறிப்பு; இது ஒரு மீள்பதிவு. 2007-ல் இருந்து இது வரை மழையின் பாதிப்பு சென்னையில் அப்படியே இருப்பதால் மீண்டும் பதிவேற்றப்படுகிறது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக