உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, மே 06, 2007

மூக்கின் மேல் கோபம்

மூக்கு
வேண்டாம் இறைவா- இதை
போக்கு

நாசி அதுவும்
நாட்டப்பட்டது
நறுமணங்களை நுகர தான்.

நச்சு மணமே
நறுமணமானதே
நரகமான நகரத்தில்.

விரல் வைத்து
சமூகத்தை யோசிக்க தான்
மூக்கு.
யோசிப்பாரில்லை
எதற்கு மூக்கு.

உயிர் மூச்சே
ஒழுக்கம் தானாம்.
அதுவே இல்லை
மூச்சு எதற்கு
மூக்கு எதற்கு?...

பலர் நகரப்
பாதைகளில்
பறக்கும் போது
சுவாசிப்பதே
வாயால் தான்.
வாய்க்கு பாவம்
வாய்ப்பு இல்லை நுகர்ந்திடவே!
நுகர்ந்திட்டால்
பின்பக்கம்
நகர்ந்திடுமே...

அண்டை வீட்டை
மோப்பம் பிடிக்கும்
மோசமான நாசி
இனியும் வேண்டுமோ?

ஜாதியென்றால்
வியர்த்து போகும்
மூக்கதுவும்
முக்கியமோ?

சுவாசிக்க வாயொன்று
ஜீவிக்கிறதே
மூக்கெதற்கு
முன்னால் நீட்டிக் கொண்டு?

பலருக்கு
பக்க்த்து மனிதரின் தனி
பட்ட விஷயங்களில்
நுழைத்து
நுழைத்தே
மூக்கு சுருங்கி விடுகிறது

வாய் செய்யும்
வழிசலுக்கு
பாவம்
மூக்கெதற்கு
அறுபட வேண்டும்?
வேண்டாம்
மூக்கு!

எங்கள்
மூக்குகளில்
காற்று ஏற வேண்டாம்
கண்டிப்பாக வெண்டாம்
காற்று முழுதும்
சமூகத்தின்
கசப்பு சிந்தனைகள்
கலந்து கிடக்கிறது.

மூக்கு வேண்டாம்
இந்த பாழும்
மனிதனின்
மூக்கில் தான்
மூவுலகின் தீமையும்
முளைத்திருக்கிறது..

மூக்கே கெட்ட சக்தி!
நல்ல பிராண வாயுவை
நைச்சியமாய் நுகர்ந்து விட்டு
கரிமல வாயுவை
கமுக்கமாய் கற்றில்
கலக்கும்
கள்ளி செடி.

மூக்கை போல தான்
முன்னிற்கும் மனிதரும்.

மூக்கு
மனிதனை வாழ வைக்கிறது.
மனிதனோ
அதை மூட வைக்கிறான்.

வாகனங்கள்,
வாசஸ்தலங்கள்,
ஆலைகள்,
அணுகுண்டுகள்.....
நாங்களே நீக்கி கொள்ளும் முன்பு
கொடுத்த நீயே
எடுத்து கொள்!

பணக்கார சமூகம்
ஏழையின்
தலையில் தட்டும்
தடாலடியில்
மூக்கிலிருந்து ரத்தம்
முளைக்காமல் இருந்தால்
போதும்....

நாசியே
நாச சக்தியாய்
போன நிலையை கண்டோம்.
மதுவை, மாதுவை
நுகர்ந்தால் தான்
இன்றைய இளைய நாசிகள்
இனிக்கின்றன.

இளமை மாறியும்
இன்னும் மாறாமல் பல
நாசிகள் இருக்கின்றன.

தட்டி எடுத்து போ
எட்ட கடுத்து போ
மட்டமான மூக்கதனை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக