உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஏப்ரல் 23, 2009

பந்த் பண்ணலையோ பந்த்

பொது ஜனம் ஒருவரும், ஆளும் கட்சி ஆள் ஒருவரும் பேசிக் கொள்கிறார்கள்....

“ஏங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் வேலை செய்யும்னு பேப்பர்ல போட்டிருக்கான்? நீங்க லீவ்னு சொல்றீங்க...”

“பஸ், ஆட்டோ எதுவும் ஓடலை.. எப்படி வாத்திமாருங்க பள்ளிக்கூடம், காலேசு வருவாக? அதான் லீவ்..”

“என்னது பஸ் ஓடலையா? போலீஸ் பாதுகாப்போட ஓடும்னு ஓடும்னு அரசு அறிவிச்சுகிறதா பேப்பர்ல போட்டிருக்கானே?”

“பஸ்ஸை ஓட்ட மாட்டோம்னு தொழிற்சங்கம்லாம் வேலை நிறுத்தம் பண்ணுது?.. அப்புறம் எப்படி ஓடும்...”

“என்னங்க இது அநியாயமா இருக்கு? அரசு அலுவலகம்லாம் வேலை செய்யுதா இல்லையா?”

“வேலை செய்யுது.. ஆனா ஆளுங்க யாரும் இருக்க மாட்டாங்க.. அப்படியே இருந்தாலும், மக்கள் அங்க போறதுக்கு பஸ், ஆட்டோ கிடையாதுல்ல... இப்ப என்ன செய்வீங்க...”

“எப்படிங்க ஒரு முதல்வர் பந்த் அறிவிக்கலாம்? அவர் அறிவிச்சதுக்கு அப்புறம் அரசு தெரிவித்ததுன்னு அது ஓடும், இது ஓடும், அலுவலகம் தொறந்திருக்கும், காலேஜு தொறந்திருக்கும்னு எப்படி சொல்றாங்க? “

"கட்சித் தலைவரா இருந்து பந்த் அறிச்சிருக்கார்.. அரசோட தலைமைப் பொறுப்பில முதல்வரா பந்த் நடக்கிறப்ப
மக்கள் பாதிக்கப்படாம இருக்க போலீஸ் பாதுகாப்போட பஸ்ஸை இயக்கறார்... அரசு அலுவலகம் வேலை செய்ய ஆவண செய்யறார்"

"என்னய்யா குழப்பறீங்க? அதான் பஸ் ஓடலையே?"

"அதுக்கு முதல்வர் பொறுப்பில்லைங்க... போக்குவரத்து தொழிலாளிங்க பஸ் ஓட்டலைன்னா அவரு என்னங்க செய்வாரு...?"

"அப்ப எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு?"

"யாரும் கலாட்டா பண்ண கூடாதுல்ல அதுக்கு தான்"

"என்னய்யா ஒரு கடை கண்ணி இல்ல.. ஓட்டல் இல்ல... எப்படிய்யா கூலித் தொழிலாளிங்க எல்லாம் பொழைப்பாங்க"

"இதுக்கே இப்படி சொல்றீங்களே? அங்க இலங்கையில தமிழர்கள் எப்படி பாதிக்க படறாங்க தெரியுமா?"

"யோவ்... நீங்க தானேய்யா மத்திய அரசுல இருக்கீங்க.. மந்திரி சபையில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே..."

"யோவ் அங்கே பிரதமரே முடிவெடுக்க முடியலை அந்தம்மா தன் முடிவெடுக்கிறாங்க... நாங்க என்னத்தை முடிவெடுக்கிறது..."

"அப்ப மந்திரி சபையை விட்டு வெளியே வர வேண்டியது தானே..."

"வெளிய வர்றதுக்குள்ள தான் தேர்தல் வந்திருச்சே? எங்க தப்பு இல்லைங்க"

"அவங்க தான் உங்க பேச்சை கேக்க மாட்டேங்கிறாங்களே? மறுபடி எதுக்கு அவங்களோட கூட்டணி?"

"இந்த முறை கேக்கிறதா சொல்லியிருக்காங்க..."

"கேக்கலைன்னா... மந்திரி சபையை விட்டு வெளியே வந்திடுவீங்களா"

"மந்திரி சபையை விட்டுட்டு வர்றதா? வந்தா இலங்கை பிரச்சினை தீர்ந்திடுமா? யார்றா இவன் விவரம் கெட்டவனா இருக்கான்?"

"பின்ன?"

"மறுபடி தந்தி, மனித சங்கிலி, பேரணி, பந்த் எல்லாம் உண்டு... ஆல் தமிழகம் என்ஜாய்"

திருவாளர் பொது ஜனம் மயங்கி சரிகிறார்...




2 கருத்துகள்:

  1. பொத்...

    (ஒன்னுமில்லை, நான் கீழே விழுந்த சத்தம்தான்)

    பதிலளிநீக்கு
  2. \\மறுபடி தந்தி, மனித சங்கிலி, பேரணி, பந்த் எல்லாம் உண்டு... ஆல் தமிழகம் என்ஜாய்"\\

    மறுபடியும் முதல்லேந்தா... அவ்வவவவ..

    பதிலளிநீக்கு