இன்னைக்கு செய்தித்தாள் பார்த்தீங்களா?.. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடடம் கட்டுறதுக்காக நட்சத்திர கலை விழா நடத்த போறாங்களாம்...
இது என்ன அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்கள் சங்கமா? இல்லை அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படும் காண்டிராக்டு ஊழியர் சங்கமா...
கோடி கோடியாய் சம்பாதிக்கும் வர்க்கம் தானே? பெரிய-சிறிய நடிகர், நடிகைகளிடம் ஒரு லட்சமோ, 2 லட்சமோ வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப நன்கொடை வாங்கி அந்த கட்டிடத்தை நடிகர் சங்கமே கட்டி கொள்ள கூடாதா?
அதற்கு ஒரு கலை விழா ஏற்பாடு செய்து அதற்கு டிக்கெட் போட்டு வசூலித்து தான் கட்டிடம் கட்ட வேண்டுமா?
அதற்கும் ரசிகர்கள் என்ற ஏமாளிகள் தலையில் தான் கைவைக்க வேண்டுமா?
என்னமோ மனசுல பட்டுச்சு...