உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூன் 19, 2008

அரசியலும் அல்பாயுசான கொள்கைகளும்...

ஒவ்வொரு அமைப்பும், அமைப்பு சார்ந்த இயக்கமும் சில கோட்பாடுகளினாலும், தத்துவங்களினாலும் துவக்கப்பட்டு, அந்த பொருள், கோட்பாடு, கொள்கை, தத்துவம் வழி நடக்கும்.

அரசியல் கட்சி என்பதும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில கொள்கைகள் இருக்கும்... அக்கொள்கைகளை நோக்கிய பயணமாகவே கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஒரு வேளை கட்சி வழி மாறி பயணிக்கும் எனில் கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. மக்களுக்கும் ஓட்டளித்தவர்கள் என்ற முறையில் அவ்வுரிமை உண்டு. ஏனெனில் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தான் கட்சிக்கு அவர்கள் வாக்கு அளிக்கிறார்கள். (?).அப்படியிருக்க கொள்கை மாறுவது துரோகம் இல்லையா?

கொள்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றி சில மலரும் நினைவுகள்...

ஜெயலலிதாவுடன் இ.காங்கிரஸ் கூட்டு செருவதை எதிர்த்து மூப்பனார் அவர்களால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியில் அவருடனே கூட்டணி அமைத்து போட்டியிட்டது....

கலைஞர் குடும்ப அரசியல் செய்வதாக கூறி வெளியேறி ம.தி.மு.க ஆரம்பித்த வை.கோ திரும்ப கலைஞருடனே கூட்டு வைத்துக் கொண்டது....

கடவுள் மறுப்பு இயக்கங்களான தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி மத வெறி கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது...

உயர்சாதி மனப்பான்மைக் கொண்ட வன்னியர்களை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சகோதரர்கள் அவர்களுடனே கூட்டணி அமைத்தது...

Secularist காங்கிரஸுக்கு socialist இடது சாரிகள் ஆதரவு அளிப்பது...

பிரச்சினை அடிப்படையிலான அரசியல் என்ற பெயரில், கொள்கைகளை காற்றில் பறக்க விடும் அரசியல் கட்சிகள் இன்னும் என்னென்ன செய்ய போகின்றன?

இவ்வளவு கொள்கை மீறல்கள் நடக்கிறது... ஏன் யாருமே கேள்வி எழுப்புவதில்லை? கண்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொல்வதைப் போல மக்களை பழக்கி வைத்து இருக்கிறார்கள்...

சரியான தலைவர் அடையாளப்படுத்த படாவிட்டால் கலைஞருக்கு பிறகு தி.மு.க உடையும் சூழ்நிலை உருவாகலாம். அப்படி நடந்து விட்டால் யார் கண்டது அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி கூட சாத்தியமே.

விஜயகாந்த்-மு.க.அழகிரி கூட கூட்டணி அமைக்கலாம்...

பணமும் பதவியும் கிடைக்கும் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

நம் தலையெழுத்து... இருக்கும் பல திருடர்களில் ரொம்ப கம்மியா திருடும் திருடனாய் பார்த்து ஓட்டளிக்க வேண்டிய நிலை தான் எப்போதும் இருக்கும் போல இருக்கிறது....




ஏதாவது அத்தியாவசிய பொருளின் விலை ஏறினால் போதும்... நம் அரசியல் தலைவர்கள் அறிக்கை விட கிளம்பி விடுவார்கள்... அறிக்கையை சீண்டுவாரில்லாத நடிகர் சரத்குமார் ஆரம்பித்து, அமைச்சர்கள் வரை ஒரே அறிக்கை தான்.... “ஆன்லைன் வர்த்தகத்தை தடைச்செய்ய வேண்டும்...”

ஆன்லைன் வர்த்தகத்தில் எத்துணை வகை உள்ளது... அதில் அத்திவாசிய பொருட்களின் விலையை பாதிக்கும் வர்த்தகம் எது... அது அரசு அனுமதியுடன் தான் நடத்த படுகிறது.. அதில் வரும் வருமானத்துக்கு பல வரிகளும், சேவைக்கட்டணங்களும் அரசாங்கமே வசூலித்து கொழுக்கிறது... என்பது உள்பட அடிப்படை தகவல்கள் ஏதாவது இவர்களுக்கு தெரியுமா?

பொத்தாம் பொதுவாக அவன் அறிக்கை விட்டான், இவன் அறிக்கை விட்டான் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விடுவதெல்லாம் அடாத செயல் என்று இவர்களுக்கு யார் சொல்வது...




சென்னையில் கட்சிக் கொடிகளுடன் வலம் வரும் பெரிய ரக கார்களின் அராஜகம் மிக அதிகமாகி கொண்டிருக்கிறது...

வட்டம், மாவட்டம் கொடிக் கட்டியது போய், எடுப்பு, தொடுப்பு, அல்லக்கைகள் வரை கார்களில் கொடிக் கட்டி கொண்டு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போக்குவரத்து போலீசாரும் கண்டும் காணாமல் விடும் போக்கு தான் நிலவுகிறது....

பிற வாகனங்களை உரசுவது போல முந்திச்செல்லுதல் , படுவேகமாக வாகனத்தைச் செலுத்துதல், பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் செல்லுதல்(ஆம்புலன்ஸ் கூட இதற்கு விதி விலக்கல்ல) இப்படி எல்லாமும் இவர்கள் அராஜகத்தில் அடக்கம். இவ்வளவும் கொடி கட்டியிருக்கும் தைரியத்தில் தான் செய்கிறார்கள்.

இந்த பதவியில் இருப்பவர்கள் தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும் என்று விதிகள் இருப்பதை போல கொடி கட்டுவதற்கும் ஒரு விதிமுறை கொண்டு வந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்...




நெருவுக்கு பின் இந்திரா, இந்திராவுக்கு பின் ராஜீவ், ராஜீவுக்கு பின் சோனியா, சோனியாவுக்கு பின் ராகுல், பிரியங்கா...

லாலுவுக்கு பின் ராஃப்ரி தேவி,

கலைஞருக்கு பின் ஸ்டாலின், அழகிரி

மாறனுக்கு பின் தயாநிதி, கலாநிதி,

ராமதாஸுக்கு பின் அன்புமணி,

மூப்பனாருக்கு பின் வாசன்,

என்.டி.ஆருக்கு பின் சந்திரபாபு நாயுடு,

தேவகௌடாவுக்கு பின் குமாரசாமி,

யார் சொன்னது இந்தியாவில் மன்னர் ஆட்சி முறை ஒழிந்து விட்டது என்று?




அரசியல் நிச்சயம் ஒரு சாக்கடை தான். அதனால் தான் அது சீக்கிரம் சுத்தப் படுத்தப் பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக