உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஜூலை 07, 2007

புரட்சி என்றால் என்ன?

புரட்சி புரட்சி என்று எல்லோரும் பேசுகிறார்களே.. புரட்சி என்றால் என்ன..? அரசாங்கத்தை கவிழ்ப்பதா?... முதலாளிகளை எதிர்ப்பதா.. ஆயுத போராட்டம் நடத்துவதா?...

எதை புரட்சி என்று எண்ணிக்கொண்டு பேசுகிறோம்..?

புரட்சி என்றால் புரட்டி போடுவது...( A drastic and far-reaching change in ways of thinking and behaving)

பெரும்பான்மையிலிருந்து பெரும்பான்மை வித்தியாசப்படுவது...

நாம் சமூக, பழக்க வழக்கங்களில் ஏற்படும் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உடனடி மாற்றம்... (உடனடி என்பது அது சார்ந்த சமூகத்தின் அளவை பொறுத்து கால அளவில் மாறும் என்பதை நினைவில் கொள்க...)

புரட்சி எது சம்மந்தப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. பொருளாதாரம், விவசாயம், அரசியல், கல்வி... இப்படி..

யாரால் வேண்டுமானாலும் திட்டமிடப்படலாம்.. சிறு குழு, பெரும் மக்கள் வெள்ளம்... அரசியல் குழுக்கள், ஏன் அரசாங்கமே கூட புரட்சிகள் செய்யலாம்.

எங்கே பார்த்தாலும் புரட்சி குறித்து விவதம் நடப்பது போல் எனக்கு ஒரு பிரமை.. எந்த புரட்சியை பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவு இருக்கிறது என்றால் மகிழ்ச்சியே.. விவதத்தில் பங்கெடுக்கும் அனைவரும் அதே புரட்சியை பற்றி தான் பேசுகிறார்களா என்பதும் முக்கியம்..

நான் புரட்சி என்றால் இவைகளை தான் சொல்லுவேன்

இந்தியாவில் அரசாங்கத்தின் செயல்பாடுகளில், அது செயற்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடையும் வகையில் புரட்சி நடக்க வேண்டும்..

அரசை இன்னும் செம்மையாக்க, அது செயல்படும் ஹைதர் அலி காலத்து நடைமுறைகளை மாற்றி நவீனத்துவப் படுத்துவதில் புரட்சி வேண்டும்... (கவனிக்க கணினி மயமாக்கல் வேறு.. நான் குறிப்பிடும் நவீனப்படுத்துதல் வேறு.. இருக்கும் நடைமுறைகள் அப்படியே கணினிமயமாக்கப்படுதல் நவீனத்துவம் ஆகாது )

உதாரணம் சொல்கிறேன் ஒருவருக்கு அரசிலிருந்து எதற்கோ இழப்பீடு வழங்கப்படுகிறது... காசோலைகளை மட்டும் நம்பியிருந்த காலத்தில் அதற்கு 15 நாள் தேவைப்பட்டது என்று வைத்து கொள்வோம்.. இப்போது ECS எல்லாம் வந்து விட்ட காலத்தில் இன்னும் 15 நாட்கள் நேரம் கேட்பது நவீனப்படுத்துதல் ஆகாது...

கடமை தவறும் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் செயல்பாடுகளில் புரட்சி வேண்டும்..

மக்கள் நலனை பேணுவதிலும் காப்பதிலும் புரட்சி வேண்டும்...

அரசு சாரா நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் புரட்சி வெண்டும்...

முதலாளிகளின் நலனை(சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதாக சொல்லிகொண்டாலும்) பாதுக்காக்கும் SEBI-க்கு இருக்கும் அதிகாரங்களை போல.. வரி வசூலிக்கும் வருமான வரித்துறைக்கும், வணிகவரித்துறைக்கும் இருக்கும் அதிகாரம் போல, சமூக நலத்துறைக்கும், சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதார துறைக்கும் இருப்பதாக தெரியவில்லையே...

அப்படியே இருக்கிறது என்றாலும் அந்த அதிகாரங்களை நடைமுறை படுத்துவதாக தெரியவில்லையே...
இதிலெல்லாம் மாற்றம் வர வேண்டும்.. புரட்சி வேண்டும்...

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நம்மால் அனுப்பப்படும் நண்பர்கள் நன்றாக செயல்படுகிறார்களா என்பதை மதிப்பீடு செய்வதில் புரட்சி வேண்டும்.. 5 வருடத்துக்கு ஒரு முறை ஆட்சியை மக்கள் மாற்றி விட்டால் அது புரட்சி ஆகாது... யார் ஆட்சி வந்தாலும்… மக்கள் நலம் தழைக்கும் வகையில் நடக்கவும், தவறினால் தண்டிக்கவும் புரட்சி வேண்டும்..

ஜனநாயம் செயல்படும் முறைகளை மாற்ற தான் புரட்சியே தவிர... ஜனநாயகத்தையே மாற்றுவது புரட்சி அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

2 கருத்துகள்:

  1. ரசித்தேன். நல்ல பதிவு மாயன்.

    பதிலளிநீக்கு
  2. செல்வநாயகி

    இந்த பதிவே தங்களுடைய "மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை" என்ற பதிவால் ஏற்பட்ட உந்துதல் என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.. இதை பின்னூட்டமாக தான் போட எண்ணியிருந்தேன்.. நீளம் கருதி தனி பதிவாக போட்டேன்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு