உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, பிப்ரவரி 13, 2010

காதலர் தினம் - மறுக்கப் பட்ட காதலுக்கு சில வரிகள்




காதலர் தினம் - மறுக்கப் பட்ட காதலுக்கு சில வரிகள்

நான்
எனக்குள் இருக்கும்
அவளுக்காக அழவில்லை.
அவளுள் இருக்கும்
எனக்காக.

****************************************

அவள் விழியின்
அகலாத ஈரம்
கொஞ்சமாய் என் கண்ணில்
அவள் இதழின்
அழகான புன்னகை
கொஞ்சமாய் என் இதழில்
அவள் மனதின்
மறைக்காத தன்மை
கொஞ்சமாய் என் மனதில்
அவள் மறுத்த
காதல் மட்டும்
மொத்தமாய் என்னுள்.

****************************************

நீண்ட
கோட்டினால் போட்ட
ஒரு வட்டம்.
வட்டத்தை நிரப்பும்
வெறுமை தான்
உன் நினைவு.
ஆனாலும்
அதன் பாரம்
அதிகமாகவே இருக்கிறது.

*****************************************


காதல் என்பது
ஒரு உணர்வு.
அதை விவரிக்க
வார்த்தைகளுக்கு
வயது போதாது..

*****************************************

காதலன்
மலரிடம்
இரைத் தேடி தான்
போனோம்! - கடைசியில்
அம்மலருக்கே
இரையானோம் !
கரை தேடி
அலையாய் வந்தோம்!- ஏனோ
கரைக்குள்ளே
புதைந்து போனோம் !

*****************************************

என்
வாழ்க்கை ஏட்டின்
இளமை பக்க்த்தில்
இருக்கிறது இன்னும்.
கருப்பாக
கண்ணே - நான்
உன்னை செய்த
காதல் கறை.
இனி,
எப்போது நான்
என் வாழ்க்கையின்
கடந்த
காலத்தை
புரட்டினாலும்
என் மேல்
கறை பட்டு
கொண்டே இருக்கும்.
படும்
ஒவ்வொரு முறையும் - அதை
கழுவ அப்போதும்
கண்ணீர் தான்
கேட்கும் உன் காதல்.

3 கருத்துகள்:

  1. அழகான வெளிப்பாடு.....

    வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. திருவிளையாடல் தருமி- "கொஞ்சம் வசன நடையா எழுதறேன்.. இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க..."

    நன்றி அகல்விளக்கு...

    பதிலளிநீக்கு