உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

32 பேர் படுகொலை

ஜோ என்ற மாணவரின் வெறிச்செயல்...........

"இன்றைய பொருளாதாரத்தின் படி.. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே போவார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே போவார்கள்..."

"இப்படியே உலகம் போனால் இருப்பவனிடத்தில் இல்லாதவன் பிடுங்கி தின்பான்..."

"வசதி படைத்தவன் தர மாட்டான்... வயிறு பசித்தவன் விட மாட்டான்..."

"கலாச்சாரமே இல்லாமல் இருப்பது தான் கலாச்சாரமாகி வருகிறது..."

படுகொலையின் பின்னனி, செய்தவரின் பின்னனி, சூழ்நிலை... வெறிச்செயலுக்கு அவர் கூறும் விளக்கங்கள்...

மேற்சொன்ன கருத்துக்கள், சம்பவத்தின் பின்னனி இவற்றிக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாக எனக்கு படுகிறது...


பல கேள்விகளுக்கு விடை காண முடியாமல், அந்த இளைஞர் இப்படிப்பட்ட வெறிச்செயலை செய்திருப்பதாக படுகிறது... அந்த கேள்விகளுக்கு முன்பே அவருக்கு விடை கிடைத்திருக்குமானால் இந்த சம்பவமே நிகழ்ந்து இருக்காதோ...

அடக்குமுறைக்கும், ஆடம்பரத்துக்கும் எதிரான போராட்டங்கள் பல வகை... பல களம்.. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியும், இடமும், அப்பாவிகளை இந்த இளைஞர் கொன்ற விதமும் அந்த ஆவேசத்தையே அர்த்தமில்லாமல் செய்து விட்டது...

இதற்கு இந்த உலக சமூகத்தில் இப்படிபட்ட ஏற்றத்தாழ்வுகளை படைத்து, மக்களை அதில் உழல விட்ட அனைவருமே வெட்கி தலைக் குனிந்து.. இறந்தவர்களிடமும், அவர்களின் குடும்பங்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்...

அனைவரின் ஆத்மாவும் சாந்தியடைய.. இறைவன் அருள் புரிவானாக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக