உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

முதலாம் ராஜேந்திரன்

சரித்திரம் என்றாலே எனக்கு இப்பொழுதெல்லாம் நினைவுக்கு வருவது சோழர்கள் தான்.

அதுவும் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், யவன ராணி போன்ற புதினங்களை படித்த பின்பு.... நாமும் அவர்கள் காலத்தில் வாழ்ந்திருக்கலாமே என்று கூட தோன்றுகிறது.

எவ்வளவோ மன்னர்கள், தளபதிகள், வீரர்கள். ஆனால் என்னைக் கவர்ந்தவர் முதலாம் ராஜேந்திரன்.

பல்லாயிரம் கடல் மைல்களுக்கு அப்பால் இருந்த கடாரம், ஸ்ரீ விஜயம் போன்ற நாடுகள் கூட அவன் இலக்கில் இருந்து தப்பவில்லை என அறியும் போது, எப்படிப் பட்ட பட்டறிவும், தொலைநோக்கும் உள்ள வீரனாக அவன் இருந்திருப்பான் என்று வியப்பாக இருக்கிறது.

பல்லயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், போர் தளவாடங்களையும், ஆட்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு அவ்வளவு தூரம் பயணப்படுவது என்றால், எவ்வளவு பெரிய, திறம் வாய்ந்த, அசாத்தியமான கடற்படை அவனிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

முதலாம் ராஜேந்திரனின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து ஏதாவது புதினங்கள் வந்துள்ளனவா என்று அறிய ஆவல்.

(சாளுக்கிய சோழ மன்னர்களில் முதல்வனான முதலாம் குலோதுங்கனுடைய வரலாற்றை சுவைப்பட விவரிக்கும், விஷ்வக்சேனன் எழுதிய "பாண்டியன் மகள்" என்னும், கல்கி இதழில் தொடர்கதையாக வந்த புதினம் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது)

4 கருத்துகள்:

  1. "Ganga puri kavalan part I & II"

    நண்பர்க்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. வேங்கையின் மைந்தன் - அகிலன் அவர்கள் எழுதியது.

    பதிலளிநீக்கு
  3. ஓகை அவர்களுக்கு நன்றி. என்னுடைய வலைப்பதிவிற்கு விஜயம் செய்தமைக்கும், புத்தகத்தின் பெயரை தெரிவித்தமைக்கும்...

    பதிலளிநீக்கு