உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

புதன், ஏப்ரல் 25, 2007

புலம்பல் மணி

நாட்டுல எவ்வளோ விதமான ஆளுங்க இருக்காங்க... சில பேருக்கு சமுதாயத்து மேல அக்கறை இருக்கும்... சில பேருக்கு இருக்காது.. சமுதாயத்து மேலயும், நாட்டு மேலயும் அக்கறை இருக்கிறவங்க பல விதம்..

சில பேரு தப்பு நடக்கும் போது உடனே ரியாக்ட் பண்ணி தப்பு பண்றவங்களை ஒரு அறை, ஒரு முழுசு விட்டுருவாங்க... சில பேரு மொட்டை பெட்டிஷன் முடி வெச்ச பெட்டிஷன் எல்லாம் போட்டுருவாங்க... சில பேரு இந்து, சந்து பொந்து எல்லாத்தலயும் எழுதிருவாங்க...
பல பேரு பஸ்ஸுல், ட்ரெயின்ல, சலூன்ல எல்லாம் மூஞ்சி முகம் தெரியாதவங்க கூட எல்லாம் தொண்டை கிழிய வாக்குவாதம் பண்ணுவாங்க...

ஆனா சிலபேரு பாருங்க … தனக்கு தானே புலம்பிப்பாங்க.. புலம்பல்னா புலம்பல் அப்படியொரு புலம்பல்... அந்த மாதிரி ஒரு கேரக்டர் தான் நம்ம "புலம்பல் மணி"....

(அப்பாடா ஒரு வழியா கேரக்டர் இன்ட்ரொடக்க்ஷன் முடிச்சாச்சு...)

இனி அப்பப்ப அவர் வந்து புலம்பரதை உங்களுக்காக ஒட்டு கேட்டு சோல்லலாம்னு இருக்கேன்...

லேட்டஸ்ட் புலம்பலை கேளுங்க..

"என்னாங்கடா... பாராளுமன்றதுக்கு போய் அரசாங்கம் தப்பு பண்ணா கேள்வி கேளுங்கடான்னு அனுப்பி வெச்சா.. இவனுங்க விதவிதமா தப்பை பண்ணிட்டு போலீசுக்கும், CBI-கும் பதில் சொல்லிட்டு இருக்கானுங்க...

இன்னொரு பக்கம் விளையாட ஒரு க்ரூப்பை அனுப்பிச்சா அவனுங்க பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு திரியரானுங்க.. அரசியல்வாதிங்க விளையாடிட்டு இருக்கானுங்க...

என்ன பண்றதுன்னே தெரியலை...

சரி நாட்டுப்பற்றை வளர்க்க தியாகிகளுக்கு அங்கங்கே சிலை வைக்கலாம்.. நம்ம ஏரியால எந்த தியாகிக்கு சிலை வைக்கலாம்னு பசங்க கிட்ட கேட்டேன்பா..
ஒட்டு மொத்தமா அபிஷேக் பச்சன்னு சொல்றானுங்க.. எங்க போய் அடிச்சிகறது?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக