உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, அக்டோபர் 21, 2007

டூ வீலர் இன்சூரன்ஸ் என்னும் கிரகம்...

இரு சக்கர வாகனம் வைத்து இருக்கும் அனைவருக்கும் செம தலைவலியான விஷயங்களில் ஒன்று...

வண்டிக்கு இன்சூரன்ஸ் போடுவது...

புதிதாக வண்டி வாங்கும் பொது வண்டி விற்கும் ஷோரூம்காரர்களே ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் செய்து கொடுத்து விடுவார்கள்... வருடா வருடம் சரியாக முடிவு தேதிக்கு முன்னரே அதை புதுப்பித்து வருபவர்கள் பிழைத்தார்கள்..

நம்ம கிரகம், ஒரு முறை அதை புதுப்பிக்க தவறி விட்டால் அவ்வளோ தான்.... தீர்ந்தது...

வாரத்தில் நாம் பிஸியாக இருக்கும் அதே வார நாட்களில் தான் அவர்களும் (இன்சூரன்ஸ் கம்பெனிகள்) பிஸியாக இருக்கிறார்கள்...

வாரக்கடைசியில் ஓய்வெடுக்க போய் விடுகிறார்கள்...

அதுவும் மூன்றாம் நபர் விபத்து காப்பீடு போட வேண்டும் என்றால் கூட வண்டியை ஆய்வு செய்து பார்த்து விட்டு தான் இன்சூரன்ஸ் பொடுவார்களாம்...

அதுவும் வண்டியை பார்த்து ஆய்வு செய்ய அவர்கள் வைத்திருக்கும் நேரம் இருக்கிறதே.. காலை 10-11 மணி வரை... ஒரு மணி நேரம் தான்...

அநேக நிறுவனங்கள் அப்படி தான்... ஒரு வேளை நம் இடத்திற்கே வந்து வண்டியை ஆய்வு செய்ய வேண்டுமானால், அதற்கு அவர்கள் வசூலிக்கும் தொகை இன்சூரன்ஸ் தொகையை விட அதிகமாக இருக்கிறது... இந்த வசதி முக்கால்வாசி கார்களுக்கு தான் இருக்கிறது...

அதுவும் முதன் முதலில் எந்த கம்பெனியில் இன்சூரஸ் போட பட்டதோ அதே நிறுவனத்தில் தான் மறுபடியும் இன்சூரன்ஸ் போட வேண்டும்... நிறுவனத்தை மாற்றினால் பிரிமியம் லோடு செய்ய வேண்டும், அன்லோடு செய்ய வேண்டும் என்று இரு மடங்கு தொகை கேட்கும் அவலமும் உள்ளது...

இன்னும் பல அரசு சார்ந்த காப்பீடு நிறுவங்களில் இரு சக்கர வாடிக்கையாளர்களை இளக்காரமாக பார்க்கும் நிலை தான் உள்ளது... (பிரிமியம் கம்மிங்க.. ஒரு காரின் காப்பீடு பிரிமியத்தில் 10 இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடலாம்.)

இன்சூரன்ஸ் இல்லையென்பது வண்டியின் பாதுகாப்புக்கு பெரிய சவால் என்பது ஒருபுறம்.. போலீஸ் சோதனையில் இன்சூரன்ஸ் இல்லாமல் சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் (பேரம் நேரடியாக 300 ரூபாயில் தான் ஆரம்பிக்கும்.. பெரிய கேஸாம்)...

நம்மால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் வண்டியை கொண்டு சென்று ஆய்வுக்குட்படுத்தி இன்சூரன்ஸ் போட முடிவதே இல்லை...

எந்த நிறுவனமாவது இந்த பிரச்சினைகளை புரிந்து கொண்டு.. வண்டியை ஆய்வு செய்யும் நேரத்தை அதிகமாக்கினால் தேவலாம்.. அல்லது அதிகம் டூ வீலர்கள் கூடும் பெரிய நிறுவனங்களில் அல்லது போது இடங்களில் சின்னதாய் ஒரு கௌண்டர் அமைத்து அங்கேயே வண்டிகளை ஆய்வு செய்து காப்பீடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்..

அவர்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும்.. நமக்கும் அலைச்சல் மிச்சமாகும்..

காப்பீடு என்பது முக்கியமான விடயம்.. இது போன்ற வசதிகளை பெறும் முறைகளை இன்னும் எளிமையாக்கினால் நிறைய மக்கள் அந்த வசதிகளை பெற்று பயனடைவார்கள்..

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரிடமும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வும், பணமும் இருக்கிறது ஆனால் அதை அணுகும் முறைகளும், பெறும் முறைகளும் எளிமையாக இருந்தால் நலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக