உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூலை 31, 2008

சுயநலச் சுழல் - பாகம் 1 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

அந்த மிக உயரமான 910 மாடி கட்டிடத்தின் 903-வது மாடியில் இருந்த அந்த ஆஃபீஸில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

சைலேஷ்- ஒரு மிகப்பெரிய கம்பெனியின் கம்ப்யூட்ட்ர் பிரிவு தலைவர். ஹார்மோன் பிறப்பு மூலம் பிறந்திருந்த அவரது உருவம் டாக்டர்களால் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தது.

டி.என்.ஏ மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் படிக்க முடிந்தது ஒரு மிகப்பெரிய மருத்துவப்புரட்சி என்று இந்திய வல்லரசு சொல்லிக்கொண்டிருந்த நேரம் அது.

கி.பி.2220.

பூமியே ரசாயன போர்களால் அல்லோலோகப் பட்டிருக்கும் நேரம். சிதறி கிடந்த நாடுகள் ஒன்றாகி 7 வல்லரசுகளாகி பூமியையே ரணகளம் ஆக்கியிருந்த ஒரு இக்கட்டான நேரம்.

எங்கு நோக்கினும் சண்டை நடக்கும் பண்டைய காலம் போல் அல்லாமல் விஷேச உடை அணுகுண்டு பாதுகாப்பு உடை அணிந்து விஷேசமாக சண்டையிடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருந்த வீரர்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி ரசாயன போர்கள் செய்து உலகின் ஒரு பக்கத்தில் தங்கி சண்டையிட்டு கொண்டிருந்தனர். மறுப்பக்கம் அமைதியான உலகம் அமைந்திருந்தாலும், ரசாயன போர்களின் பாதிப்புகள் அவர்களையும் அலைக்கழித்து கொண்டிருந்தன.

எய்ட்ஸ் போன்ற பண்டைய கால வியாதிகள் காற்றில் பரவக்கூடிய புதிய ரூபத்தில் வந்து மக்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தன.
ஏரியல் ட்ராஃபிக் (Arial Traffic) என்று சொல்லப்படும் வான்வழி போக்குவரத்து நெரிசலாகி விட்டிருந்தது. ஓஸோன் படலத்தை செயற்கையாக தயாரித்துப் படர விட்டிருந்தாலும் சூரிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் கோர ரூபத்தை காட்டிக்கொண்டு தான் இருந்தன.

விண்வெளி நிலையங்கள் பல்வேறு கோள்களில் அமைக்கபட்டிருந்தன. செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழும் இடமாகியிருந்தது. மனிதர்கள் பலர் அமைதி வாழ்வைத்தேடி த்ங்கள் கலங்களில் விண்வெளியில் சுற்றியலைந்துக் கொண்டிருந்தனர்.

செவ்வாய் கிரகத்தை இந்திய வல்லரசு கைப்பற்றி தங்கள் நாட்டவரை அங்கே குடி வைத்திருந்தது. இருந்தாலும் மணி ஆஃப் கேலக்ஸி (Money of Galaxy) என்று சொல்லப்படும் விண்வெளியில் உள்ள அனைத்து இடங்களிலும் செல்லும் பொதுவான பணத்தைப் பெற்றுக்கொண்டு பிறரையும் அனுமதித்தது. ஸிரா (Zira) என்று சொல்லப்பட்ட இந்த பணம் சர்வதேச பணம் மட்டுமல்ல சர்வ கிரக பணம்.

வேற்று கிரகத்தவருடன் பல்வேறு வகைகளில் தொடர்புக்கொண்டு நமது பால்வீதியின் பக்கத்து நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருந்த கோள்களில் ஒன்றில் காணப்பட்ட விண்வெளி மனித இனத்துடன் நட்பு பூண்டிருந்தனர், மனிதர்கள்.

பூமி வேகமாக காலியாகிக் கொண்டிருந்தது. பனிப்பொழிவு கடல் கொந்தளிப்பு பூமி சுற்றும் வேகம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டிருந்த ஆபத்து இவைக் காரணமாக பூமியில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ முடியாது என்பதால் அனைவரும் வாழக்கூடிய கோள்களில் குடியேறிக் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நம் கதை துவங்குகிறது. 910 மாடி கட்டிடத்தில் பேசிக்கொண்டிருந்த மற்றொரு நபர், வர்மா.

"என்ன சொல்கிறீர்கள் சைலேஷ்? அந்த கம்ப்யூட்டர் வைரஸ்கள் ஆபத்தானவையாயிற்றே?"

"தெரியும் வர்மா! அதுவும் தெரியும்! நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி கம்ப்யூட்டர்களையும் ஏமாற்றி தகவல்களை அழிக்கக் கூடிய வைரஸ்களை படைக்கக் கூடியவர் என்பதும் தெரியும்! வைரஸ்களை அனுமதிக்காத கம்ப்யூட்டர்களையும் தாக்கும் வல்லமைப்படைத்த வைரஸ்களை நீங்கள் எங்களுக்காக உருவாக்கித்தர வேண்டும்..."

"மிஸ்டர் சைலேஷ்! உங்களுக்கு தெரியும்.. கம்ப்யூட்டர் வைரஸ்கள் த்யாரிப்பது கம்ப்யூட்டர் சட்ட்த்தின் கீழ் மரண தண்டனை வழங்கும் அளவுக்கு கொடிய குற்றம்.. காரணம் கம்ப்யூட்டர்கள் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் குழந்தை கூட பிறக்க முடியாது... அதுமில்லாமல் வீட்டுக்கு வீடு, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது... மிக ஆபத்தான விஷயம்...."

அவர் தயங்கி தயங்கி இழுப்பதை பார்த்த சைலேஷ் சிரித்தான்..

"நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எவ்வளவு ஸிரா வேண்டும் என்பது உங்கள் விருப்பம்... அந்த வைரஸ்களை எம்ப்டியாக 5000 எண்ணிக்கையில் தயாரித்து தரவேண்டும் உடனடியாக... ஒரு 5 லட்சம் பைட்கள் பிடிக்கும் அளவிற்கு ஒவ்வொரு வைரஸும் இருக்க வேண்டும்...தாய் வைரஸ்கள் 2000 இருந்தால் கூட போதும்.. நான் லேசர் போனில் தடர்பு கொள்கிறேன். உங்களுடைய திறமைக்கு எங்கள் கம்பெனி கடமைப்பட்டதாகும்...இன்த ஜாபை வெற்றி கரமாக முடித்துக் கொடுத்தால் இன்னும் மூன்று ஜாப்கள் தருவோம்.வருகிறேன் மிஸ்டர் வர்மா" என்று பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினார்...

மனிதக்காற்று சமீபிப்பதை அறிந்த ஏர் சென்சார் ஒர்க்கில் கதவு தானாக திறந்தது. வெளியேறியவுடன் மூடியது...

வர்மா எழுந்து ரிலாக்ஸ்டாக ஃப்ரீ மைண்ட் நாற்காலியில் அமர்ந்தார். உடனே அறையில் அவருக்கு பிடித்த மென்மையான இசை அறையில் பரவியது...

தொடர்ந்து பக்கத்து அறையிலிருந்து அவரது இப்போதைய லைஃப் பார்ட்னர் மேகலா வந்தாள்.

"வர்மா.. என்ன சொன்னார் சைலேஷ்"

"சைலேஷ் நமக்கு எவ்வளவு ஸிரா வேண்டுமானாலும் தர தயார்...அவருக்கு அந்த வைரஸ்கள் தயாரித்து தர வேண்டுமாம்"

"வர்மா இதை விட நமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது! செவ்வாய் கிரகத்தில் குடியேற நமக்கு தேவைப்படும் 7 மில்லியன் ஸிராவையும் இந்த ஒரே ஜாபில் சம்பாதித்து விட முடியும்.. நாம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருக்கும் 16 மில்லியன் ஸிராவை தாராளமாக செலவு செய்து வாழலாம்.. இன்று இரவு முழுவதும் வேலை செய்தாலே போதும் அவ்ர்கள் கேட்கும் வைரஸ்களை தயாரித்து விட முடியும்..."

வர்மா மௌனமாக தலையாட்டினார்.

உடனே தன்னுடைய பிரத்யேக லேபில் வைரஸ் தயரிக்க கிளம்பினார்..

==============================

மறுநாள்

வர்மா அந்த மெகா டி.வி.யில் த்ரீ.டீ என்று சொல்லப்படும் முப்பரிமாண தொலைக்கட்சியில் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்.
பாடிக்கொண்டிருந்த டி.வி பெண் த்ரீ டீ எஃபக்ட்டில் நெருங்கி நெருங்கி வந்தாள். அவரை சுற்றி சுற்றி பாடினாள். அவர் தலைக்கு மேல் தாவினாள்.

அப்போது அந்த உருவம் திடீரென ஒரு மூலையில் தெரிந்தது. அது சைலேஷ். லேசர் போனில் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உருவம் முதலில் தெரிந்தவுடன் இவர் கனெக்ஷனை ரிசீவ் செய்யும் பட்ட்னை ரிமோட்டில் தட்ட, இவர் உருவம் அங்கே தெரிந்தவுடன் சைலேஷ் புன்னகைத்தான்.

டி.வி.யை அணைத்தார், வர்மா.

"என்ன சைலெஷ்? எப்படியிருக்கிறது பொருள்?"

"சூப்பர்.... நன்றாக வேலை செய்கிறது. எங்கள் கம்பெனிக்கு நீங்கள் செய்த உதவிக்கு எங்கள் கம்பெனி செய்யும் பதிலுதவி... லேசர் பிரிண்டரை ஆன் பண்ணுங்கள் வர்மா.."

என்றவுடன் ரிமோட்டில் அந்த போனின் அருகிலிருந்த பிரிண்டரை ஆன் செய்தார் வர்மா.

சைலேஷ் பட்டனைத் தட்டியவுடன் பிரிண்டர் வேலை செய்தது.
'உய்ய்ய்' என்ற மெல்லிய உறுத்தாத உறுமல். தொடர்ந்து அந்த கார்டு அவர் கைக்கு வந்தது.

10 மில்லியன் ஸிராவிற்கான காசோலை கார்டு.

எல்லா நிதியமைப்பிலும் செல்லுபடியாகும் ப்ளூட்டோனியம் கார்டு. பரவசமானார் வர்மா.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சைலேஷ்..இவ்வளவு பணத்தை கொடுக்குமளவு பெரிய கம்பெனி.. அது என்ன கம்பெனி சொல்லுங்கள் சைலேஷ்?"

"சொல்கிறேன் வர்மா... இப்போதல்ல... நாளை மறுநாள் இரண்டாவது ஜாபை ஒப்படைக்கும் போது... அதுவரை பை பை"

அவனது உருவம் மறைந்தது. வர்மா மேகலாவை அழைத்தார்.

"மேகலா 10 மில்லியன் ஸிரா கிடைத்திருக்கிறது... ஹே... நாம் உடனே செவ்வாய் கிரகம் போகிறோம்.. நான் இப்போதே டிராவல் ஏஜன்ஸி ஒன்றை தொடர்பு கொள்கிறேன்.. பாவம் சைலேஷ்.. இரண்டாவது ஜாபை ஒப்படைக்கிறேன் என்றான்.. சரி என்று சொல்லி விட்டேன்.. அவன் அடுத்த முறை தொடர்பு கொள்ளும் போது நாம் விண்வெளி கலத்தில் இருப்போமோ, செவ்வாய் கிரகத்தில் இருப்போமோ தெரியவில்லை.. ஆனால் தொடர்பு கொண்டு விட முடியும்.. நாம் தான் அவனுக்கு உதவ முடியாது..."

"வர்மா.. நான் ஏரியல் ஷாப்பிங்கில் நமக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்.. நீங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு போய் நம் நண்பர் யோகேந்தை காண்டக்ட் பண்ணுங்கள்"

என்று சொல்லிவிட்டு பரபரப்பாக கிளம்பினாள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக