உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

திங்கள், ஜூலை 21, 2008

அங்கிள் சாமும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டும்

எப்படியோ அறிவிக்கப்படாத மின்வெட்டை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாய் அறிவிக்கப்பட்ட மின்வெட்டாய் மாற்றி விட்டார்கள்...

ஒரு மணி நேரத்துக்கு அதிகமாய் கரண்ட் கட் இருக்காது என்ற உத்திரவாதமாவது இதன் மூலம் இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்....

இதில் புதிதாய் கிளம்பியுள்ள இன்னொரு புரளி தமிழகத்தில் எப்போதும் பழக்கத்தில்(?) இல்லாத அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இப்போது மட்டும் ஏன்?

தமிழகம் அல்லாது பல மாநிலங்களிலும் இதே போல மின்வெட்டு நடைமுறையில் இருக்கிறது... ஏன்?

நம் ஆட்சியாளர்களுக்கு புதிதாக ஏற்படப்போகும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திண்ணமாய் ஒரு காரணம் வேண்டும்....

புள்ளி விவரங்கள், எதிர்கால கணிப்புகள் விஞ்ஞானிகளையும், பொருளாதார அறிஞர்களையும் வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.. ஆனால் மக்கள்? அவர்களுக்கு விளங்க வைக்க ஒரே வழி மின்வெட்டு தான்....

இந்தியாவின் மின் தேவையின் எதிர்காலத்தை மக்களுக்கு புரிய வைக்க தேர்தலை கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் மின்வெட்டு அறிவிக்குமா அரசாங்கங்கள்?

இந்த அணுசக்தி காண்டிராக்ட் 50000 கோடி மதிப்புள்ளது... அது கைக்கு கிடைத்தாக வேண்டும்... அணு ஒப்பந்தத்தை ஆதரித்தால் மீண்டும் ஆட்சி அமைக்க சி.ஐ.ஏ உதவி செய்வதாக கூட வாக்களித்து இருக்கலாம்....(சி.ஐ.ஏ இது போன்ற காரியங்களுக்கு பெயர் போனது.. யாருக்கு தெரியும் வலைப்பூக்களை கூட ட்ரான்ஸ்லேட்டர் வைத்து கண்காணித்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)

உண்மையில் நம் நாட்டில் மின்வெட்டு கொண்டு வரும் அளவிற்கு மின் பற்றாக்குறை இல்லையாம்...

இப்படி போகிறது அந்த புரளி...

எது உண்மையோ, எது நன்மையோ ஆண்டவனுக்கே சாரி... அங்கிள் சாமுக்கே வெளிச்சம்...

1 கருத்து: