உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூலை 31, 2008

சுயநலச் சுழல் - பாகம் 2 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

வர்மா அந்த நிறுவனத்தின் மிக பெரிய அதிகாரியான சந்தர் முன் அமர்ந்திருந்தார்.

"வர்மா.. நீங்கள் எங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேஸ் நிறுவனத்தைப் பற்றி எந்த விதமான சந்தேகமும் கொள்ள இடம் இல்லை... இது வரை 30000 பேரை பத்திரமாக செவ்வாய் கிரத்துக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறோம்... உங்களுக்கு தேவையான குடியிருப்பு, வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன... இங்கே எங்கள் ஸ்டேஷனில் கிளம்புவதில் இருந்து அங்கே செட்டில் ஆகும் வரை எல்லாம் எங்கள் பொறுப்பு மிஸ்டர் வர்மா... உங்களுக்கு காஸ்மோநாட்டாக வந்து விண்வெளி கலத்தை செலுத்தப் போவது உங்கள் நண்பர் யோகேந்த் தான்.. அவர் தான் எங்கள் நிறுவனத்தின் சிறந்த காஸ்மோநாட்... நீங்கள் எந்த பயமுமில்லாமல் எங்கள் கலத்தில் பயணம் செய்யலாம்..."

யோகேந்தும் ஆமோதித்தார்.

"உண்மை தான் வர்மா... நீங்கள் செலுத்த போகும் 8 மில்லியன் ஸிராவில் உங்களுக்கு கிடைக்கப் போவது இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வேஸின் வழி, செவ்வாய் இந்தியன் ஷெல்ஸ் குடியுரிமை, ஒரு இல்லம் மற்றும் எங்கள் விண்கலத்தில் பாதுகாப்பான பயணம்.. அங்கேயும் நீங்கள் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டர் நிபுணரான நீங்கள் எங்கு சென்றாலும் வாழலாம்."

வர்மா தலையசைத்தார். சம்மதிப்பது போல.

"அப்போது நான் பணத்தை உங்கள் நிதி நிறுவனத்தில் செலுத்தி விடுகிறேன்.. நாளையே நாம் புறப்படலாம்.."

கிளம்பினார்.

மேகலாவை வழியிலேயே தொடர்புக் கொண்டு விஷயத்தை தெரிவித்தார்.

=================================================

எல்லாம் தயாராகி விட்டது.

விண்கலத்தில் பிரத்யேக உடைகளில் புறப்பட தயாராக யோகேந்த், வர்மா, மேகலா.

சந்தர் எதிரே லேசர் போனில் தெரிந்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்..

"சரி கவுண்ட் டவுன் ஆரம்பிக்கட்டும்"

பூஜ்யம் வந்தவுடன், லேசான அதிர்வு ஆரம்பித்தது. வெண்மையான ஒளி விண்கலத்தின் வாலில் தோன்றியது.

வெண்மையான ஒளியில் ஆரம்பித்து, நீலம்- பச்சை- மஞ்சள்- ஊதா நிற ஒளிக்கற்றைகள் ஊடுருவ ஆரம்பித்து,

'ச்சுய்ய்ய்ய்' என்ற ஒலியை தொடர்ந்து விண்கலம் மேல் நோக்கி சீறி பாய்ந்தது. உடனே அடுத்த நொடியே, விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய ஆரம்பித்தது.

பூமியை விட்டு மூன்று நிமிடங்களில் விலகி அண்டத்தை நோக்கி சென்று கலந்தது.

பல்வேறு ஏரியல் சிக்னல்களில் கிளியராகி,

இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே எனப்ப்டும் பால்வீதியின் பிரத்யேக வழியில் விரைய ஆரம்பித்தது அந்த விண்கலம்.

======================================


"யோகேந்த.. இந்த அண்டத்தில் எந்த இடையூரும் இல்லை.. ஏன்.. எதற்கு இந்த இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே?"

"இல்லை. இந்த டிரான்ஸ்வே மூன்று லட்சம் ஒளிமைல் தூரம் வரை தான்.. அதற்கு மேல் நாம் செவ்வாய் கிரகத்தை பார்த்தபடி பயண தூரத்தை கடக்க வேண்டும். வழியில் இரண்டு இடங்களில் எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.. நாம் அங்கே கூட நிற்க தேவை இராது.. தேவைக்கு மேலேயே நம்மிடம் எரிபொருள் இருக்கிறது...இதை பாருங்கள்.. இங்கே தான் மஞ்சள் நிற ஒளிர்வுடன் இருக்கிறதே இது தான் இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை குவித்து வைத்திருக்கும் இடம். இது பழைய விண்கலங்கள் குப்பையாக கொட்டப்படும் இடம்.."

எதிரே ஸ்க்ரீனில் அண்டம் எனப்படும் பால்வீதியின் பிரம்மாண்டம் நீலமாக தண்ணீர் தெளித்தாற் போல ஒளிப்புள்ளிகளுடன் தெரிந்து கொண்டிருந்தது.

ஒரு அரை மணி நேரம் பின்

லேசர் போனில் தொலை தொடர்பு ஆள் தெரிந்தார்..

"உங்களுக்கு உங்கள் பழைய குறியீட்டில் ஒரு தகவல் வந்திருக்கிறது.. அதை உங்களுக்கு கனெக்ட் பண்ணலாமா?"

"நிச்சயமாக. காத்திருக்கிறேன்.. இணைப்பு கொடுங்கள்..."

அவர் மறைந்து சைலேஷ் தெரிந்தான்... அணைந்தான்...

தொலைதொடர்பு ஆள் மறுபடி தோன்றினார்.. "இணைப்பு துண்டித்து கொண்டது.. மன்னிக்கவும்"

"அவர் மறுபடி தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கொடுங்கள்" என்று போனை கட் செய்தார்.

மேகலா அதே நேரம் யோகேந்திடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தாள்..

"என்ன யோகேந்த் என்ன நடக்கிறது இங்கே?"

"கருந்துளையை பற்றி மேகலா கேட்கிறார்கள்"

"கருந்துளையா?"

"ஆமாம்.. விண்வெளியில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று..."

"ரொம்ப ஆபத்தானவையா என்ன ஆபத்து?

மேகலா கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார்..

"இதுவும் சூரியன் போல ஒரு நட்சத்திரம் தான்.. சூரியனை விட பெரிய நட்சத்திரம் என்று கூட சொல்லலாம்.. இவ்வாறான நட்சத்திரங்கள் அண்டத்தில் கோடிக்கணக்கில் உள்ளன.

இந்நட்சத்திரங்கள் காலப்போக்கில் தங்கள் ஒளி கொடுக்கும் எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒளியை இழக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆரம்பத்தில் இவற்றின் ஈர்ப்பு சக்தியானது பூமியை விட சிறியதாக தான் இருக்கும்.. எரிபொருள் தீர்ந்தவுடன் அவற்றின் சீதோஷணம் குளிர ஆரம்பிக்கும்.. அது தானே அழிய ஆரம்பிக்கும்...

அதனுள் இருக்கும் அணுக்கள் உடைந்து எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானாக பிரியும்.. இப்படியாக அழிவை நொக்கி பயணித்து தான் இருந்த அளவை விட 100 மாங்கு சின்னதாக ஆகும்.. ஆனால் என்ன காரணத்தாலோ அதன் ஈர்ப்பு சக்தி 10000 மடங்கு அதிகமாகும்... மேலும் மேலும் எலக்ட்ரான் ரிபல்ஷன் என்று சொல்லப்படும் எலக்ட்ரான் தாக்குதல்கள் அதனுள் நடந்து ஈர்ப்பு அக்தி ஏலும் வலுவடையும்..

இப்படியாக நியூட்ரான் ஸ்டார் என்று சொல்லப்படும் நிலைக்கு வந்து 500 மடங்கு பழைய உருவத்தில் குறைந்து ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும்...அப்போது அதன் ஈர்ப்பு சக்தி 100,000,000,00 மடங்கு அதிகரித்திருக்கும். கடைசியாக ஒளி உமிழ்தலால் சக்தி இழப்பு ஏற்பட்டு மேலும் சிறியதாகி ஒரு கட்டத்தில் ஒளி கதிர்கள் வருவது கூட நின்று விடும்..

அப்போது இது கருப்பாக காணப்படுதால் கருந்துளை எனப்படும்.. இதன் ஈர்ப்பு சக்தியின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் காரணத்தால் நெருங்கும் எந்தப் பொருளையும் இழுத்து உள்வாங்கி கொள்ளும்.. அவ்வளவு தான் உள்ளே போன எதுவும் திரும்பி வரவே வராது...

இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை ரகசியமாக கருந்துளைக்குள் தள்ளி விடுவதாக கூட வதந்திகள் உண்டு..."

"நாம் போகும் வழியில் ஒரு கருந்துளை தெரியும்... இதோ தெரிகிறது பாருங்கள்..." என்று திரையில் ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...

வர்மா பேச்சை மாற்ற விரும்பியவராய்

"செவ்வாய் கிரகம் பூமியை விட குளிர்ந்த கிரகம் இல்லையா?" என்று கேட்டார்...

"நிச்சயமாக..ஆனால் நீங்கள் குடியேற போகும் மார்ஸ் இந்தியன் ஷெல்ஸ் செயற்கையான் முறையில் அணு கதிர்வீச்சால் பாதுகாப்பான முறையில் வெப்பமூட்டப் பட்டிருக்கிறது.. கவலையே இல்லை. செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை முறை ரொம்ப எளிமையானது... அதிகமான மக்கள் தொகை கிடையாது... விஷேச எந்திர மனிதர்களின் காவல் 24 மனி நெரம் 37 நிமிஷங்களும் இருக்கும்... பூமியுடன் எந்த நெரமும் தொடர்பு கொள்ளலாம்... அதுவுமில்லாமல் செவ்வாய் கிரகம் யுத்தமில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்றொரு வசதி..."

யோகேந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த லேசர் போன் கூப்பிட்டது...

திரையில் சைலேஷ் தெரிந்தான்...

ஆன் பண்ணியவுடன்

சிரித்தான்...

"புதிய இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டீர்களா வர்மா? பழைய குறியீட்டில் தாங்கள் இல்லையே?"

என்று ஆரம்பித்தான்..

"ஆமாம்" என்றார் குறும்பு சிரிப்புடன் வர்மா.

"நினைத்தேன்.. உங்கள் முதல் ஜாப் அபாரம்.. எங்கள் நிறுவன தலைவர் உச்சி குளிர்ந்து விட்டார்.. இரண்டாவது ஜாப் தரப்போகிறோம் நாளையே..."

"அப்படியா.. அந்த பொருளை என்ன தான் செய்தீர்கள்?"

ஆர்வ மிகுதியில் பக்க்த்தில் இருந்த யோகேந்தை மறந்தவராய் கேட்டார் வர்மா.

"நீங்கள் கொடுத்த இன்ட்ரூடர் வைரஸ்களில் எங்கள் விஷேச நிரலிகளை நிரப்பி எதிரி நிறுவன கணினி கேந்திரங்களை தாக்கி விட்டோம்... உங்களிடம் மறைப்பானேன்.. எதிரி நிறுவனத்தின் தானியங்கி வழிக்காட்டி நிரல்களை குழப்பி விட்டோம்... அவர்கள் எந்த கிரகத்துக்கு பயணம் புறப்பட்டாலும்... அவர்களுக்கு சரியாக போவது போல தான் தெரியும்... ஆனால் அவர்களுக்கே தெரியாமல்.... கருந்துளை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? சரி அது எதற்கு நமக்கு விடுங்கள்... நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு இன்று முதல் போதாத காலம்..."

அடுத்து சைலேஷ் சொன்ன எதுவுமே காதில் விழாமல் யோகேந்த் உடனடியாக ஆன் போர்டு கேமிராவை இயக்க திரையில் ஒரு கருப்பு வட்டம் பெரிதாகிக் கொண்டிருந்தது....

"ஹோ" என்று அலறிய படி மூவரும் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

படு பயங்கரமான அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசையில் இவர்களின் விண்கலம் சிக்கிக் கொண்டது...

இதே போன்று ஈர்ப்பு விசையில் சிக்கி நுழைந்திருந்த பல்வேறு பாறைகள், குப்பைகள், துகள்களோடு வேக்மாக ஒரு சுழல் போல...

அனைத்தையும் தன் கருப்பு உடலுக்குள் இழுத்துப் போட்டுக் கொன்டிருந்த கருந்துளைக்குள்,

கிர்ரென்ற புயல் வேகத்தில் விண்கலம் செல்ல ஆரம்பித்து இருந்தது...

1 கருத்து: