உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூலை 24, 2008

சென்னையின் மர்மக்கொலைகள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக எல்லோரது தூக்கத்தையும் கெடுத்து வருவது சைக்கோ கொலைகாரன் பற்றிய பீதி...

பரபரப்பு செய்திகளை காசு பண்ணும் பத்திரிகைகள்...

தூக்கமிழந்த ஊர்காவல் படையினர், காவல் துறையினர்...

திடீர் ஹீரோவாக ரோந்து சுற்றி வரும் இளவட்டங்கள்...

ஒதுங்க இடமின்றி அலையும் சென்னையின் பரிதாபத்தற்குரிய நடைபாதை வாசிகள்,

அநாதை சிறுவர்கள், பிச்சைக்காரர்கள், பேப்பர் பொறுக்கும் வேலை செய்வோர்...

தெருவில் படுத்துறங்கும் வெளியூர் தொழிலாளிகள்... என்று

பகட்டான மனிதர்கள் முதல் பரிதாபத்துக்குரிய மனிதர்கள் வரை அனைவரின் அன்றாட சாதாரணமான வாழ்வியலை ஏதோ ஒரு வகையில் பாதித்துக் கொண்டு இருக்கிறது...

இத்தனை கொலைகள் நடந்தும் ஏன் இன்னும் கொலைகாரனை பிடிக்கவில்லை என்று எல்லா தரப்பும் போலீசை சாடிக் கொண்டிருக்கின்றனர்....

சென்னையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வீதிகளில், படுத்துறங்கும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது என்பது நடவாத செயல்... நடைமுறையில் சாத்தியம் இல்லையும் கூட...

சைக்கோ கொலைக்காரன் பேரில் வேறு யாராவது முன்விரோதத்தில் கொன்றிருப்பார்களோ என்பதில் ஆரம்பித்து, தடயங்கள் சேகரித்தல், விசாரணை என்று ஒரு கொலைக்கே போலீசாரின் உயிர் போய் விடும்... இதில் இது வரை 8 கொலைகள் நடந்துள்ளது... நிச்சயம் அவ்வளவு சுலபத்தில் விசாரணையை முடித்து விட முடியாது..

இதில் மீடியாக்களின் பிரஷர், அரசாங்கத்திலிருந்து பிரஷர்... என்ன தான் செய்யும் போலீஸ்...

எல்லா TV-களிலும் பேட்டி அளிக்கும் பொது மக்கள் அனைவரும் போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வியாக கேட்பதை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது...

நம்மை சுற்றியுள்ள சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது... குறைந்தபட்சம் நாம் பாதிக்கப்படும் போதாவது எதிர்த்து குரல் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்...

நம் அண்டை வீடுகளில், நம் தெருவில் வசிப்பவர்கள் யார் யாரென நாம் தெரிந்து வைத்துக்கொண்டாலே பல சிறு குற்றங்களை தடுத்து விடலாம்.. சிறு குற்றங்கள் தான் பெரும் திருட்டு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமையும்....

மக்களுக்கு குற்றங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு, வாழும் மனிதர்களுக்குள் ஒற்றுமை, பிறருக்கு உதவி செய்யும் மனிதநேய மனம் இவை ஏற்படும் வரை போலீசாருக்கு அதிக வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்...

4 கருத்துகள்:

  1. வெட்டிப்பயல்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்களை அழகாய் தெளிவாய் வெளியிட்டுள்ளீர்கள், வாழ்த்துக்கள், உங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு