உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஜூன் 09, 2007

நேர்மையான கொள்ளை, கள்ளக்கடத்தல் தொழில்..

நேர்மை....
எந்த தொழில் செய்ய நேர்மை தேவை?

எந்த தொழிலில் நேர்மையும், ஒழுக்கமும் உள்ளது...?
நல்லா யோசிச்சி பாருங்க...

தெரியலை தானே?
நான் ஒழுக்கமாக நடக்கும் சில தொழில்களை எல்லாம் சொல்றேன்...
சரியான்னு பாருங்க


கள்ள கடத்தல்
ஆட்க் கடத்தல்
கொள்ளை.. திருட்டு...
மோசடி....

என்னடா இப்படி சொல்றானேன்னு பயந்துக்காதீங்க...

விஷயத்தை முழுசா கேளுங்க...

இதெல்லாம் சட்டத்துக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக நடக்கிற தொழில்கள்...

இதில் உள்ள வேலையாட்கள் மற்றும் பணி சூழ்நிலை குறித்து பார்ப்போம்...

1) தொழில் நடத்தும் இடத்தில் பெரிய வசதியெல்லாம் இருக்காது.
2) உடன் வேலை பார்க்கும் அனைவரும் மகா கோபகாரர்கள், கிரிமனல்கள்.
3) வெளியே தைரியமாக நடமாட முடியாது... (போலீஸ்)
4) உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.
5) உண்மை தெரிந்தால் ஊருக்குள் யாரும் பேச மாட்டார்கள், பழக மாட்டார்கள்.. சொந்த குடும்பமே எதிர்க்கும்.
6) P.F, கிராஜுவிட்டி எதுவும் கிடையாது.
6) எல்லவற்றுக்கும் மேல் அரசாங்க ஒத்துழைப்பு என்பதே கிடையாது.

இத்தனை இருந்தும் இந்த தொழிலில் பாருங்கள்..

அவரவர் வேலையை அவரவர் கச்சிதமாக செய்து முடிக்கின்றனர்...

நன்றாக சம்பாதிக்கிறார்கள்...

எங்கே கிளம்பிட்டீங்க? ஓ... கள்ள கடத்தல் பண்ணவா?

யோவ்.. இரும்மயா...என்ன அவசரம்? நான் இன்னும் முடிக்கலை...

இதெல்லாம் நான் சொன்னது அந்த தொழில்களை நியாயப்படுத்த இல்லை.... இல்லவே இல்லை...

எப்படி இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் இந்த தொழில்களில் நேர்மையும், ஒழுக்கமும், Customer Satisfaction(?)... எல்லாம் இருக்கிறது...

உதாரணத்துக்கு அரசாங்க உத்தியோகங்களை எடுத்து கொள்ளுங்கள்...

இருங்க.. இருங்க.. நான் அரசாங்க உத்தியோகத்தை கள்ள கடத்தலோட ஒப்பிடலை... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அவசரம்...

நம்ம அரசாங்கம் எவ்வளவு வசதிகளை செய்து தருகிறது?
எவ்வளவு சலுகைகள்?..
எவ்வளவு உரிமைகள்...
கடமையை ஆற்ற எவ்வளவு வசதிகள்..

யாரது எவ்வளவு தொல்லைகள் கூட என்றது?... அதெல்லாம் தருவாங்க தான்.. ஆனால் அதெல்லாம் மீறி கடமை ஆற்ற தான் நிறைய வழிமுறைகள் கொடுத்திருக்காங்க... மனசாட்சி படி கடமை ஆற்ற வழிகள் இல்லாமல் இல்லை...

நம்ம தனியார் தொழில்துறைகளை எடுத்து கொள்ளுங்கள்... எவ்வளவு ஊக்கம்..? எவ்வளவு வசதிகள்.. அங்கீகாரம்..
இருந்தும் எந்த தொழிலாவது மனசாட்சிபடி, நேர்மையாக நடக்கிறதா?...

இவ்வளவு தங்கள் கடமைகளை யாராவது ஒழுங்காக செய்கிறார்களா?

அவரவர் கடமையை செய்ய வைக்க அரசாங்கமும், கோர்ட்டும் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது?
ஒழுக்கமாக,நேர்மையாக தொழில்கள், வேலைகள் நடக்க எவ்வளவு கட்டுப்பாடுகள், சட்டத்திட்டங்கள், விதிமுறைகள்.. அதிலும் ஓட்டைகளை கண்டுபிடித்து குறுக்கு வழிகளை தேடும் கும்பல்கள்...

ஏன் சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடும் நபர்களிடம் இருக்கும் ஒழுக்கம் சட்டப்படி நடக்கும் வேலைகளிலும், தொழில்களிலும் இல்லை?

1) அவர்கள் தொழிலில் பத்திரங்கள் எழுதி வைத்து கொண்டு கோர்ட்டு வழக்கு என்று ஏறி இறங்க முடியாது... அதனால் சட்ட திட்டங்கள், நெறி முறைகள் சரியாக, முறையாக, நடைமுறைக்கு ஏற்ற படி வகுக்கப்படுகின்றன.

2) அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், புரட்சிகளும் உடனே உபயோகத்திற்கு வருகின்றன.

3) விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் மீற பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.

4) தொழில் ரகசியங்கள், Confidential Info வெளியார்க்கு தெரிவிக்க பட மாட்டாது.. மீறினால்..

5) ஒரு முறை ஏமாற்றினால், சரியாக வேலை முடிக்கா விட்டால் யாரும் மறுபடியும் வேலை தர மாட்டார்கள். தொழில் நடக்கவே நடக்காது.

புரிகிறதா சமூகமும், அரசாங்கமும் எங்கே கோட்டை விடுகிறார்கள் என்று?

இது போல நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் தொழில்கள், வேலைகள் நடக்க

1) சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது. நடைமுறைக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும்.(உங்களுக்கு தெரியுமா? எத்தனை சட்டங்களை வெள்ளையர்கள் இயற்றியவைகளை இன்னும் காலத்துக்கு தக்க படி மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று)

2) தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் கடுமையாக்க பட வேண்டும்..

3) விதிமுறைகளை மீறும் தொழில் அமைப்புகளை மீண்டும் தொழில் செய்ய முடியாத படி தடை செய்ய வெண்டும்.

4) தொழில் செய்வதற்கும், அரசாங்க பணிகளை செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செவ்வனே நிறைவேற்றி தர வேண்டும்... (பாவம் போலீஸ் நண்பர்கள் இன்னும் 303 ரைஃபிள்களை வைத்து கொண்டு தான் ஏ.கே 47 களையும், 9 MM பிஸ்டல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது)

இதெல்லாம் சரியாக இருந்தால் தான் சர்வதேச சந்தையில் நம் பொருட்களின் மதிப்பு புரியும்.
மக்களுக்கு சரியான விலையில், தரமான பொருட்கள் கிடைக்கும்.

அரசு இயந்திரம் மக்களுக்கு இன்னும் பயனுள்ள வகையில் செயல்படும். மேற்சொன்ன நேர்மையான நிழல் தொழில்களை அழிக்க முடியும்...

ஆகவே நண்பர்களே...

கொளுத்தி போட்டுட்டேன்.. ஆதரவு தெரிவியுங்களேன்..

2 கருத்துகள்:

  1. நண்பரே
    என்னுடைய பல எண்ணங்களை உங்கள் பதிவில் காண்கிறேன்.

    நன்றாக உள்ளது உங்கள் பதிவும் சிந்தனையும்.

    பதிலளிநீக்கு
  2. //நண்பரே
    என்னுடைய பல எண்ணங்களை உங்கள் பதிவில் காண்கிறேன்.

    நன்றாக உள்ளது உங்கள் பதிவும் சிந்தனையும். //

    நன்றி...

    பதிலளிநீக்கு